வெள்ளி, 17 செப்டம்பர், 2021
கருவறை
மூலஸ்தானத்தில் மூலவர் சிலை நிறுவப்படும் பகுதியை என்னவென்று அழைப்பார்கள்?
அதிஷ்டானம் என்பார்கள்
அதிஷ்டானத்தை வேறு எவ்வாறு அழைப்பதுண்டு?
பீடம் என்றும் சொல்வதுண்டு.
கருவறையின் வெளிப்புறச்சுவரை எவ்வாறு அழைப்பதுண்டு?
கோஷ்டம் என்பார்கள்.
அவற்றில் என்ன இருக்கும்?
கடவுளின் பல்வேறு உருவங்கள் இடம் பெற்றிருக்கும்.
அங்கு பிரதிஷ்டை எதனை பிரதிஷ்டை செய்திருப்பார்கள்?
ஒரு கோவில் எந்த மூர்த்திக்கு உரியதோ, அந்த மூர்த்தியை அங்கு பிரதிஷ்டை செய்திருப்பார்கள்.
அந்த கருவறை எப்படிப்பட்டதாக இருக்கும்?
எத்தனை ஆண்டுகளைக் கடந்தாலும் இறை அருளை அள்ளித்தரும் பொக்கிஷமாக இருக்கும்.
இந்த நடைமுறை எப்பொழுது தோன்றியது?
2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே
இந்த நடைமுறை ஆகம வழிபாட்டு முறைகளுக்கு பின்பா தோன்றியது?
ஆகம வழிபாட்டு முறைகளுக்கும் முன்பே தோன்றி விட்டது.
இவ்வாறு கருவறைகளைக் கட்டிவித்தவர்கள் யார்?
அந்த காலக் கட்டத்தில் நாட்டை ஆண்ட மன்னர்கள்.
இவர்கள் இவற்றை இவ்வாறு கட்டுவித்ததற்கான காரணம் என்ன?
தங்களது அரண்மனையை விட அருள் அலை தரும் கோவில்கள் எப்போதும் உறுதியாக நின்று நிலைப் பெற்று திகழ வேண்டும் என்ற எண்ணத்தில் கற்களால் ஆன கருவறையைக் கட்டினார்கள்
இவர்கள் இவ்வாறு எத்தனை வகையான கோவில்களைக் கட்டுவித்தார்கள்?
எட்டு வகையான கோவில்களை
அந்த எட்டு வகையான கோவில்களும் எவை?
மாடக்கோவில், கரக்கோவில், ஞாழற் கோவில், கொகுடிக் கோவில், இளங்கோவில், மணிக்கோவில், ஆலக்கோவில்.
இவ்வாறு அமைக்கப்படும் ஆலயங்களில் கருவறை பகுதி எப்படிப்பட்டதாக அமைக்கப்பட்டன?
சதுரம், வட்டம், முக்கோணம் எனும் 3 வித அமைப்புகளில் அமைக்கப்பட்டன.
இவ்வாறு அமைக்கப்படும் கருவறையில் சதுர அமைப்பு எதனுடன் தொடர்புடையதாக கருதப்படுகின்றது?
தேவ உலகத்துடனும்,
வட்டம் எதனுடன் தொடர்புடையதாக கருதப்படுகின்றது? இறந்தவர்களுடன்
முக்கோணம் எதனுடன் தொடர்புடையதாக கருதப்படுகின்றது?
மண்ணுலகத்துடன்.
தமிழ்நாட்டில் எந்த அமைப்புடன் ஆலய கருவறை அமைப்பதில்லை?
முக்கோண அமைப்புடன்
வட்ட வடிவ கருவறைகளை எங்கு காணலாம்?
புத்த ஸ்தூபிகளிலும் பள்ளிப்படை கோயில்களிலும் மட்டுமே காணமுடியும்.
கருவறை வட்ட வடிவில் அமைக்கப்பட்ட ஆலயம் எது?
மதுரை அழகர்கோவிலில் உள்ள ஆலயக் கருவறை
ஆலய கருவறை சுற்றுப்பகுதி ஒரே மாதிரியானதாகவா இருக்கும்?
கருவறை சுற்றுப்பகுதி ஆலயத்துக்கு ஆலயம் மாறுபடும்.
தொன்மை சிறப்பு வாய்ந்த ஆலயங்களில் கருவறை வெளிப்பகுதி எந்த வடிவில் இருக்கும்?
கஜப்ருஷ்டம் வடிவில் இருக்கும்.
இதில் கஜம் என்றால் என்ன?
யானை
ப்ருஷ்டம் என்றால் என்ன? பின்பகுதி என்று பொருள்.
கருவறை வெளிப்புற சுவர் எப்படிபட்டதாக இருக்கும்?
யானையின் பின் பகுதி போன்ற வடிவில் இருக்கும் என்று அர்த்தம்.
இத்தகைய அமைப்பை என்னவென்று கூறுவார்கள்?
‘‘தூங்கானை மாடக்கோவில்’’ என்பார்கள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
-
16258) அறநெறிக் கல்வியின் “மகுட வாசகம்” என்ன? “கல்வியின் சிறந்த குறிக்கோள் பண்புடைமையே” 16259) அதன் “இலட்சிய நோக்கு” என்ன? சிறார்களி...
-
நமசிவாய என்பதற்கு என்ன பொருள்? சிவனை வணங்குகிறேன் என்பது பொருள். இறைவனின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக