அறநெறி அறிவு நொடி
கே. ஈஸ்வரலிங்கம், தலைவர்/ஸ்தாபகர் தமிழர் நற்பணி மன்றம்
(சாக்தம்)
6080 சக்தியை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயம் எது?
சாக்தம்
6081 இறைவனைத் தாயாகக் காணும் வழிபாடு எது?
சக்தி வழிபாடு
6082 சிவம் என்பது என்ன?
மெய்ப்பொருள்
6083 பிரியாது இதனிடத்திலிருந்து நிலைத்துள்ள தொடர்புக்கு என்ன பெயர்?
சக்தி
6084 சக்தி முத்தொழில்களை செய்யும் போது பெறும் பெயர்களைத் தருக?
பிரம்மாணி, வைஷ்ணவி, உருத்திராணி.
6085 சக்தியை சிவத்துக்கு ஒப்பிடும் போது அழைக்கப்படும் பெயர் என்ன?
துர்க்கை
6086 சக்தி தீமையை அழிக்கும் போது பெறும் பெயர் என்ன?
காளி
6087 இராமன் இலங்கைக்கு வரும் முன் யாருக்கு பூஜை செய்தார்?
துர்க்கைக்கு
6088 அவதார புருஷராகிய கண்ணன் யாருக்கு பூஜை செய்துள்ளார்?
காத்யாயினி
6089 சங்கராச்சியார் யாரைப் பூஜை செய்தார்?
சாரதாவை.
6090 இராமகிருஷ்ணர் யாரை வணங்கி வந்தார்?
காளியை.
6091 ஜகதம்பா உணவு அளிக்கும் போது என்ன பெயரில் அழைக்கப்படுகிறாள்?
அன்ன பூரணி.
6092 சக்தி அனைத்துக்கும் அரசியாக இருக்கும் போது என்ன பெயரில் அழைக்கப்படுகிறாள்?
இராஜராஜேஸ்வரி.
6093 சிவனுக்கு சமமான நிலையில் சக்தி அமையும் போது எவ்வாறு போற்றப்படுகிறான்?
பராசக்தி என்று
6094 சக்திக்கு தனி உரிமை கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாலும் புராணங்களின் செல்வாக்கினாலும் தோன்றிய மதம் எது?
சாக்தம்.
6095 பெண்ணுக்கு முதன்மை கொடுக்கும் மதம் எது?
சாக்தம்.
6096 சைவத்திற்கும் சாந்தத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன?
முதன்மை வேறுபாடே
6097 சிவத்தையன்றிச் சந்தியை வழிபடுவது என்று கூறிய முனிவர் யார்?
பிருங்கி முனிவர்
6098 அம்மாள் வழிபாட்டிற்கு மிக முக்கியமானது எது?
கோடுகளாலான யந்திர வழிபாடாகும்.
6099 சக்தி வழிபாட்டில் யந்திர வழிபாட்டை என்னவென்று அழைப்பர்?
ஸ்ரீ சக்கர பூசை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக