புதன், 21 ஏப்ரல், 2010




அறநெறி

அறிவு

நொடி

கே. ஈஸ்வரலிங்கம்,
தலைவர்/ஸ்தாபகர்
தமிழர் நற்பணி மன்றம்


(திருக்கேதீஸ்வரம்)

6723) ‘மஹாதுவட்டாபுரம்’ என புராதன காலத்தில் அழைக்கப்பட்ட தலம் எது? – திருக்கேதீச்சரம்

6724) மஹாது வட்டாபுரம் என்னும் பெயர் என்னென்ன பெயர்களில் மருவி வந்துள்ளது? – மாதோட்டம், மாந்தோட்டம், மாந்தை

6725) இத்திருத்தலம் எந்த தீர்த்தக் கரையில் உள்ளது? – பாலாவி

6726) இத்தலத்தில் கோயில் கொண் டெழுந்தருளியிருக்கும் சிவபிரான் யார்? - கேதீசநாதர்

6727) இத்தலத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சக்தி எந்தத் திருப்பெயர் கொண்டு அழைக்க ப்படுகிறார்? - கெளரியம்மை

6728) திருக்கேதீச்சரத்தில் உள்ள தலவிருட்சம் எது? – வாகை

6729) ஈசன் என்னும் பதம் யாரைக் குறிக்கும்? – சிவபிரானை

6730) ஈசன் எழுந்தருளியிருக்கும் இடம் என்னவென்று அழைக்கப்படும்? - ஈஸ்வரம்

6731) திருக்கேதீச்சரத்தின் சிறப்புக் கூறும் புராணம் ஒன்று இருந்து மறைந்து விட்டதாக 1887லே இலங்கை வேந்திய சங்கத்திலே குறிப்பிட்டவர் யார்? - போக்

6732) தடஹிணகைலாச மஹாத்தியம் எந்த புராணத்தின் ஒரு பகுதியாகும்? – வடமொழியிலுள்ள ஸ்கந்த புராணத்தின்

6733) தட்ஷிணகைலாச மஹாத்மியத்திலே எந்தப் பகுதியிலே திருக்கேதீச்சரச் சிறப்புப் பற்றி கூறப்பட்டுள்ளது? – ஸ்ரீகேதீஸ்வர §க்ஷந்திர வைபவம் என்ற பகுதியில்

6734) திருக்கேதீச்சரத்தின் சிறப்பு எந்த ரீதியில் இதில் கூறப்பட்டுள்ளது? - பெளராணிக

6735) மாதோட்டம் என்னும் திருக்கேதீஸ்வரத்தில் அடியார்களுக்கு அருள் புரியும் நோக்கமாகக் கெளரியம்பிகை எவ்வாறு காட்சியளிக்கிறார்? - நேத்திரானந்தம் கொள்ளப் பஞ்ச கிருத்ய நடனம் செய்து கொண்டு இருக்கிறார்.

6736) அம்பாள் இவ்வாறு நடனம் செய்து கொண்டு இருத்தலினாலும் இவ்விலங்கை சிறந்ததாக இருக்கின்றது. இதற்கொப்பான தேசம் பிறிதொன்று உண்டானதும் இல்லை. இனி உண்டாவதும் இல்லை என்று கூறியவர் யார்? – முக்காலமும் உணர்ந்த சூதமுனிவர்

6737) சூதமுனிவர் யாருக்கு எடுத்துரைத்ததாகக் கூறப்பட்டுள்ளது? - நைமிசாரண்ய முனிவர்களுக்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812