புதன், 28 ஏப்ரல், 2010

அறநெறி அறிவு நொடி


சூரிய பகவான்




கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர், ஸ்தாபகர்

- தமிழர் நற்பணி மன்றம்


6738 சூரியனை மூன்று வித அக்கினிகளில் ஒருவராக விவரிப்பது எது?

ரிக்வேதம்.

6739 சூரியனையே உலகம் அனைத்திற்கும் ஒளி தருபவர் என எதில் விவரிக்கப்பட்டுள்ளது?

சாம வேதத்தில்.

6740 கொடும் நோய்களிலிருந்து விடுவிப்பதற்குச் சூரிய வழிபாடுதான் சிறந்தது என எதில் குறிப்பிடப்பட்டுள்ளது? அதர்வண வேதத்தில்

6741 சூரியனை முழுமுதற் கடவுளாகக் கொண்ட மதம் எது?

செளரம்.

6742 சூரியனைப் பற்றிய செய்திகளைத் தெளிவுற கூறுவது எது?

சூரியபுராணம்.

6743 பூமிக்கு மேல் சூரிய மண்டலம் வரை உள்ளது எது? புவர்லோகம்.

6744 புவர்லோகத்திற்கு மேல் உள்ளது எது?

சுவர் லோகம்

6745 சுவர்லோகம் எது வரை உள்ளது?

மேல் துருவ மண்டலம் வரை

6746 மக்கள், வானவர், பிதிர்கள் ஆகியோரை வளர்ப்பது யார்?

சூரியன்

6747 மூச்சுடரால் உலகின் அகமும் புறமும் தழுவி சுடர்க் கொழுந்தாய் பேரொளியாய் சூரியன் விளங்குகின்றான் என்ற எவை முழங்குகின்றன?

வேதங்கள்.

6748 மேற்படி கூற்றின் உண்மையை கூறும் புராணம் எது? கூர்ம புராணம்

6749 எந்தெந்த பூசைகளின் போது சூரிய பூசைக்கு முன்னுரிமை வழங்கப்படும்?

சிவபூசை, ஆலய பூசை, யாக பூசை, சந்தியா வந்தனம்.

6750 சூரியன் யாரை மணந்தார்?

சஞ்சிகையை

6751 சஞ்சிகை யாருடைய புதல்வி?

துஷ்டாவின்

6752 சூரியன் யாருக்கு தந்தையானார்? வைவஸ்வதமனுயமன் அஸ்வினி தேவர்களுக்கு

6753 சூரியனுடைய வெம்மையைச் சகிக்க இயலாத சூரியனின் மனைவி சஞ்சிகை என்ன செய்தார்?

தனது நிழலைப் பெண்ணாக்கிவிட்டு சூரியனை விட்டு பிரிந்தாள்.

6754 அந்நிழல் யார்?

சாயாதேவி

6755 சாயாதேவியின் உறவால் சூரியனுக்கு பிறந்தவர்கள் யார்?

சாவர்னிமனு, சனிபத்திரை

6756 அதன்பின் சாயாதேவியின் சங்கதியை அறிந்த சூரியன் என்ன செய்தார்?

தவத்தில் தலை நின்ற தன் சஞ்சிகையை அழைத்து வந்தார்.

6757 அவர்கள் இருவரையும் சூரிய பகவான் எந்த சக்திகளாக்கிக் கொண்டார்?

உஷா, பிதத்யுஷா

6758 அருக்கன் சருஷினி என்னும் பெண்ணிடமிருந்து பெற்றுக்கொண்டது யாரை?

வால்மீகியை

6759 அகத்தியர், வசிட்டர் என்போருக்கு யார் மூலம் தந்தையானார்?

ஊர்வசி மூலம்

6760 பெண் குரங்கான இரு ஷவிரனுடன் கூடி பெற்றது யாரை?

சுக்கிரீவனை

6761 குந்திதேவியின் கூட்டத்தால் ஆதித்தன் யாரை மைந்தனாக்கிக் கொண்டார்?

கர்ணனை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812