அறநெறி அறிவு நொடி
கே. ஈஸ்வரலிங்கம்,
தலைவர்/ஸ்தாபகர்
தமிழர் நற்பணி மன்றம்
திருக்கோணேச்சரம்
6715. இலங்கையின் கிழக்குக் கடற்கரை ஓரமாக அமைந்துள்ள மலைத் தொடர்களையும் இயற்கைத் துறைமுகத்தையும் கொண்டுள்ள பிரதேசத்தில் அமைந்திருக்கும் ஆலயம் எது? திருக்கோணேச்சரம்
6716. திருகோணமலையை வேறு எவ்வாறு அழைப்பர்?
திரிகோணமலை
6717. இதற்கு திரிகோணமலை என்ற பெயர் எப்படி ஏற்பட்டது?
ஒரு புறம் கடலும் மற்றைய மூன்று பக்கங்களும் மலை சூழ்ந்து இருப்பதால் பொது வகையால் திரிகோணமலை எணப்பட்டது.
6718. இம்மலைத் தொடரில் தொகுக்கப்பட்டுள்ள மலைகளின் பெயர்களைத் தருக?
கோணேசர்மலை, கந்தசாமி மலை, வெள்ளாட்டிமலை, பாதாளமலை, மத்திளமலை, புறாமலை, கழகி மலை.
6719. கோணேசர் மலையானது முக்கோண வடிவில் கடலினுள் நீண்டு கிடப்பதால் ஏற்பட்ட பெயர் என்ன?
திரிகோணமலை.
6720. மலைகளுக்கு இடையே சமுத்திரம் உட்புகுந்து இருப்பதால் திருகோணமலையில் உலக பிரசித்தி பெற்ற இயற்கைத் துறைமுகம் அமைந்திருக்கிறது. இந்த இயற்கைத் துறைமுகத்தில் இந்த நுழைவாயிலிலுள்ள மலையினை என்ன வென்று அழைப்பர்?
பாதாளமலை.
6721. கோணேசர் கோயிலைக் கட்டியவன் யார்?
மனு மாணிக்க ராஜா எனும் மன்னர்.
6722. அவர் இந்தக் கோயிலை கட்டிவித்தது எப்போது?
கி.மு. 1300 ஆம் ஆண்டிற்கு முன்னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக