அறநெறி அறிவுநொடி
கே. ஈஸ்வரலிங்கம்
தலைவர்/ஸ்தாபகர்
(தமிழர் நற்பணி மன்றம்)
முருகப் பெருமான்
7036) ‘முருகு’ என்ற சொல்லுக்குரிய பொருள் என்ன?
இளமை, மனம், அழகு, தெய்வம்
7037) சங்ககால மக்கள் மலையும் மலை சார்ந்த பகுதிக்குரிய கடவுளாக வழிபட்டது யாரை?
முருகன்
7038) முருகப் பெருமானின் அருட்திருட் நாமங்களை தருக.
முருகன், குமரன், குகன், சரவணபவன், சேனாதிபதி, சுவாமிநாதன், வேலன், கந்தன், கார்த்திகேயன், சண்முகன், தண்டாயுதபாணி, வடிவேலன், குருநாதன், சுப்பிரமணியன்
7039) முருகன் என்பதற்கு உரிய பொருள் என்ன?
அழகுடையவன்
7040) குமரன் என்பதற்குரிய பொருள் என்ன?
இறைவனாய் எழுந்தருளியிருப்பவன்
7041) குகன் என்பதன் பொருள் யாது?
கங்கையால் தாக்கப்பட்டவன்
7042) சரவணப் பொய்கையில் உதித்ததால் முருகனுக்கு ஏற்பட்ட பெயர் என்ன?
சரவணபவன்.
7043) முருகன் சேனைகளின் தலைவனாக விளங்கியதால் ஏற்பட்ட பெயர் என்ன?
சேனாதிபதி
7044) முருகனுக்கு சுவாமிநாதன் என்ற பெயர் வரக் காரணமென்ன?
தந்தைக்கு உபதேசித்ததால்
7045) வேலன் என்ற பெயர் வரக் காரணம் என்ன? வேலினை ஏந்தியதால்
7046) கந்தன் என்ற பெயரின் பொருள் என்ன?
ஒன்று சேர்க்கப்பட்டவன்
7047) கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதால் ஏற்பட்ட பெயர் என்ன?
கார்த்திகேயன்
7048) ஆறுமுகங்களை உடையவன் என்பதால் ஏற்பட்ட பெயர் என்ன?
ஆறுமுகன், சண்முகன்
7049) தண்டாயுதத்தை கையில் ஏந்தியதால் வந்த பெயர் என்ன?
தண்டாயுதபாணி
7050) அழகுடைய வேலை ஏந்தியதால் வந்த பெயர் என்ன?
வடிவேலன்
7051) தந்தைக்கு குருவாக இருந்து உபதேசித்ததால் வந்த பெயர் என்ன?
குருநாதன்
7052) சுப்பிரமணியன் என்ற பெயர் வரக் காரணமென்ன?
மேலான பிரம்மத்தின் பொருளாக இருப்பவன் என்பதால்
7053) முருகனுக்கு உரிய பழமொழிகள் சில தருக.
வேலை வணங்குவதே வேலை
சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை;
சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமில்லை
வயலூர் இருக்க அயலூர் தேவையா?
காசுக்குக் கம்பன் கருணைக்கு அருணகிரி
அப்பனை பாடிய வாயால்-
ஆண்டிச் சுப்பனைப் பாடுவேனா?
முருகனுக்கு மிஞ்சிய தெய்வமில்லை;
மிளகுக்கு மிஞ்சிய மருத்துவம் இல்லை.
சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்.
(சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்)
கந்தபுராணத்தில் இல்லாதது
எந்த புராணத்திலும் இல்லை.
கந்தன் களவுக்கு கணபதி சாட்சியாம்
பழநி பழநின்னா பஞ்சாமிர்தம் வந்திடுமா?
சென்னிமலை சிவன்மலை சேர்ந்தோர் பழனிமலை.
செந்தில் நமக்கிருக்கச் சொந்தம் நமக்கெதற்கு?
திருத்தனி முருகன் வழித்துணை
வருவான் வேலனுக்கு ஆனை சாட்சி
வேலிருக்க வினையுமில்லை;
மயிலிருக்கப் பயமுமில்லை.
செட்டிக் கப்பலுக்குச் செந்தூரன் துணை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக