அறநெறி அறிவு நொடி
கே. ஈஸ்வரலிங்கம் - தலைவர்/ ஸ்தாபகர்,
தமிழர் நற்பணி மன்றம்
(கோலங்கள்)
7184) அழகு மட்டுமன்றி நம்மை பக்தி பாதையிலும் அழைத்துச் செல்பவை எவை?
கோலங்கள்
7185) புள்ளிகளையும் கோடுகளையும் கொண்ட இந்த கோலங்கள் எத்தன்மையை கொண்டவை?புனிதத் தன்மை
7186) கோலங்கள் போடுவதால் கிடைக்கும் பலன் என்ன?
புண்ணியம்
7187) ஆண்டவனின் அவதாரங்களையும் வடிவங்களையும் என்னவென்று கூறுவர்?
திருக்கோலம்
7188) கோலங்கள் வெறும் வடிவங்கள் மட்டும்தானா?
இல்லை, அது விஷயங்களை வெளிப்படுத்தம் உருவங்கள்
7189) ஒரு வீட்டில் நடைபெறும் விசேஷத்தை முற்றத்திலேயே சொல்லுவது எது
வாசலில் இடப்படும் கோலம்.
7190) ஒரு பூஜை முழுமையடைய முதல் காரணமாக அமைவது எது?
கோலம்
7191) கோலங்களுக்கு பூஜை செய்வது எப்போது?
(சித்திரமான கோலத்திற்கு) சித்திரா பெளர்ணமி அன்று.
7192) பூஜிப்பதற்குரிய வேறு கோலம் என்ன?நவக்கிரஹ கோலம்
7193) நவக்கிரஹ கோலங்கள் எவ்வாறு போடப்படும்?
அந்தந்த கிரகத்திற்கு உரிய தானியத்தை தாம்பாளத்தில் பரப்பி, அதில் வரைந்து பூஜிக்கப்படும்.
7194) கோலங்களை அரிசி மாவினால் போடுவதால் ஏற்படும் பலன் என்ன?
ஆயிரக் கணக்கான பேருக்கு அன்னமிட்ட புண்ணியம்.
7195) அரிசி மா கோலத்தில் இந்த அன்னமிட்ட புண்ணியம் எவ்வாறு கிடைக்கிறது?
எண்ணற்ற எறும்புகள் அதனை உண்பதால்
7196) வளைவுகளான கோடுகளாக இருந்தாலும் வாழ்க்கை நேராக இருக்க இறைவனின் ஆசியை பெற்றுத் தருபவை எவை?
கோலங்கள்
7197) புராண காலத்திலிருந்து புகழ்பெற்று விளங்குபவை எவை?
கோலங்கள்
7198) இராமன் முடிசூடப்போகின்றான் என்பதை அறிந்த மக்கள் தமது மகிழ்ச்சியை தெரிவித்தது எவ்வாறு?
வீடு வாசல், வீதி என எல்லா இடங்களிலும் குதூகலத்துடன் கோலம் போட்ட தன் மூலமேயாகும்.
7199) சந்தோஷத்தின் வெளிப்பாடாக மட்டுமல்லாது நல்லதையே நடத்தித் தரும் அச்சாரமாக விளங்குவது எது?
கோலம்
7200) மஹா லட்சுமிக்கு கோலத்தின் மகிமையை எடுத்துரைத்தவர் யார்?
மஹா விஷ்ணு
7201) மஹா விஷ்ணு இதனை எப்போது எடுத்துரைத்தார்?
வராக அவதாரம் எடுத்தபோது
7202) மஹா விஷ்ணு கூறியது என்ன?
கலியுகத்தில் மக்கள் மனக்குழப் பத்திலும் துன்பத்திலும் உழல்வார் கள் தர்மம் நலிவுறும் அப்போது அவரவர் இல்லங்களில் இடப் படும் கோலங்கள் மக்களின் மனதை நல்வழிக்குத் திருப்ப உதவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக