கே. ஈஸ்வரலிங்கம்,
தலைவர், ஸ்தாபகர்
தமிழர் நற்பணி மன்றம்
(கும்பாபிஷேகம்)
8553) கும்பாபிஷேக கிரியைகளை செய்யும் போது ரட்சோக்ண ஹோமம் செய்வார்கள். இதில் ‘ரட்சோ’ என்றால் என்ன?
அரக்கர்கள்
8554) இதில் க்ணம் என்றால் என்ன?
ஒடுக்குதல்
8555) ரட்சோக்ண ஹோமம் ஏன் செய்யப்படுகிறது?
அரக்கர்கள் தீங்கு செய்யாமல் இருக்க
8556) ரட்சோக்ண ஹோமம் எவ்வாறு செய்யப்படும்?
கலசங்கள் மேல் ஐந்து வகையான அஸ்திர மந்திரங்களையும் ஓதி அரிவாள், சுத்தி ஆகியவற்றில் ரட்சோக்ண தேவதைகளையும் தேங்காயில் ருத்ரனையும் ஆவாகணம் செய்து பூஜித்து ஆலயத்தை வலம் வரச் செய்து ஹோமம் முடிந்ததும் மங்கள வாழ்த்தியம் முழங்க வலம் வரவேண்டும்.
8557) எண் திசைக் காவலர்களும் யார்?
இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன்.
8558) பிரவேச பலியின் போது முதலில் என்ன செய்யப்பம்?
சுற்றி எட்டுத் திசைகளிலும் உள்ள துர்தேவதைகளும் பூஜிக்கப்படும்
8559) இவ்வாறு பூஜிக்கப்பட்ட பின் என்ன செய்யப்படும்?
எண் திசைக் காவலர்களை அவர்களுக்குரிய திசைகளில் வரவழைத்து வழிபாடு செய்யப்படும்
8560) பிரவேச பலி செய்யப்படுவது எதற்கு?
ஆலயத்தை காத்திடும்படி வேண்டுவதற்கு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக