திங்கள், 27 ஜூன், 2011

அறநெறி அறிவுநொடி

கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர், ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்


8573 மிருத் சங்கிரணத்தில் ‘மிருத்’ என்றால் என்ன?

மண்

8574 சங்கிரணம் என்றால் என்ன?

எடுத்தல்

8575 அங்குரம் என்பது என்ன?

முளைக்கின்ற விதை

8576 அர்ப்பணம் என்றால் என்ன?

போடுதல்

8577 யாக பூஜைகள் நல்ல பலன்கள் அளிக்கும் பொருட்டு முளைப் பயிரை இட்டு இந்த யாக சாலையில் பூஜைகள் நன்கு செய்யப்பட்டுள்ளதா என்பதை எவ்வாறு அறியலாம்?

பயிர்கள் வளர்வதைக் கொண்டு

8578 கும்பாபிஷேகத்தில் பங்கு பெறு கின்ற சிவாச்சார்யர்கள், பட்டாச்சார்யார்கள் இந்த வைபவம் நிறைவு பெறும் வரை வேறு செயல்களில் ஈடுபடாமல் இருக் கவும் இடையூறுகள் நேராத வண்ணம் தங்களைக் காத்துக் கொள்ளவும் என்ன செய் வார்கள்?

காப்பு கட்டிக் கொள்வார்கள்.

8579 இவ்வாறு கட்டிக் கொள்வதை என்னவென்று கூறுவார்கள்?

மந்திர வேலி

8580 மந்திர வேலி என்பதை வேறு எவ்வாறு அழைப்பர்?

ஆசார்ய ரட்சாபந்தனம்

8581 இறைவனுக்கு பூஜை செய்யும் முன்பு என்ன செய்ய வேண்டும்?

மந்திரார்த்தமாக இந்தப் பூத உடலை சுத்தம் செய்தல் வேண்டும்.


8582 இவ்வாறு சுத்தமாக்குவதற்குரிய மந்திரங்களைக் கூறி வழிபடுதலை என்னவென்பர்?

பூதசுத்தி

8583 இடத் தூய்மையை என்னவென்பர்?

ஸ்தான சுத்தி

8584 பொருட் தூய்மையை என்னவென்பர்?

பூஜா திரவிய சுத்தி

8585 எச்சில் வருகின்ற வாய் சொல் லும் மந்திரத்தை எண்ணத்தினால் தூய்மைப்படுத்துதலை என்னவென்பர்?

மந்திர சுத்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812