திங்கள், 20 ஜூன், 2011
அறநெறி அறிவுநொடி
கே. ஈஸ்வரலிங்கம்,
தலைவர், ஸ்தாபகர்
தமிழர் நற்பணி மன்றம்
கும்பாபிஷேகம்
8561) ஸ்ரீசூக்த ஹோமம் யாரை குறித்து செய்யப்படுகின்றது?
மகாலக்ஷ்மியை
8562) ஸ்ரீ சூக்த ஹோமத்தால் ஏற்படும் பலன் என்ன?
கும்பாபிஷேகப் பணிகளில் ஈடுபட்டிருப்போரின் வீடுகளில் லக்ஷ்மி கடாட்சம் ஏற்படும் என்பது ஐதீகம்.
8563) ஸ்ரீ சூக்த ஹோமத்தின் போது எந்த மந்திரங்கள் சொல்லப்படும்?
ஸ்ரீ சூக்த மந்திரங்கள்
8564) ஸ்ரீ சூக்த மந்திரங்கள் எதில் உள்ளது?
ரிக்வேதத்தில்
8565) ஆலயக் கட்டுமானப் பணிகளில் குறைகள் ஏதும் இருப்பின் கும்பாபிஷேகத்தின் போது அவற்றிற்கு பரிகாரமாக செய்வது என்ன?
சாந்தி ஹோமம்
8566) சாந்தி ஹோமம் செய்யப்படும் போது யாக குண்டங்களில் என்ன மந்திரங்கள் சொல்லப்படும்?
பாசுபஸ்திர மந்திரங்கள்
8567) பாசுபஸ்திர மந்திரங்களைக் கூறி என்ன செய்வர்?
கலசத்தில் ஆவாகனம் செய்வர்
8568) கலசத்தில் ஆவாகனம் செய்த பின் என்ன செய்யப்படும்?
ஹோமம் செய்யப்படும்
8569) ஹோமம் செய்த கலச நீரை என்ன செய்வர்?
அஸ்தி தேவருக்கு அபிஷேகம் செய்யப்படும்.
8570) கும்பாபிஷேகத்திற்கு முன்னதாக எழுந்தருளும் தெய்வ பிம்பங்களுக்கு சக்தியூட்டும் விதமாக செய்யப்படும் ஹோமத்தை என்னவென்று சொல்வர்?
மூர்த்தி ஹோமம்
8571) சிவபெருமானுக்குரிய பெருமைகளைக் கூறி நடத்தும் யக்ஞம் என்ன?
சம்ஹிதா ஹோமம்
8572) சம்ஹிதா ஹோம யக்ஞத்தை வேறு எவ்வாறு அழைப்பர்?
பரிகார யக்ஞம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
-
16258) அறநெறிக் கல்வியின் “மகுட வாசகம்” என்ன? “கல்வியின் சிறந்த குறிக்கோள் பண்புடைமையே” 16259) அதன் “இலட்சிய நோக்கு” என்ன? சிறார்களி...
-
நமசிவாய என்பதற்கு என்ன பொருள்? சிவனை வணங்குகிறேன் என்பது பொருள். இறைவனின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக