திங்கள், 13 பிப்ரவரி, 2012


கே. ஈஸ்வரலிங்கம்,
தலைவர்/ஸ்தாபகர்
தமிழர் நற்பணி மன்றம்

8941. காளைக்குரிய வேறு பெயர் களைத் தருக.

நந்தி, எருது, விடை,
ஏறு வெள்ளேறு, ரிஷபம், இடபம், நந்திதேவர், நந்தி மகாதேவர், நந்தி கேசுவரர்.

8942. நந்தி தேவரின் நான்கு கால்களும் எதை உணர்த்து கின்றன?

நான்கு வேதங்களை

8943. பிரதோஷநேரத்தில் முதல் பூசை யாருக்கு உரியது?

நந்தி தேவருக்கு

8944. சிவன், நந்தி தேவரின் இரு கொம்புகளுக்கு இடை யில் திருநடனம் புரியும் நேரம் எது?

பிரதோஷ நேரம்.

8945. பிரதோஷ நேரத்தில் முதல் பூசை நந்தி தேவருக்கு நடத்துவது ஏன்?

சிவன் அந்நேரம் நந்தி தேவரின் கொம்புகளுக்கு இடையில் திரு நடனம் புரிவதால் அந்த நேரம் சிவ தரிசனம் செய்தால் அளவற்ற நற்பலன்கள் கிடைப்பது உறுதி என்பதால் ஆகும்.

8946. பொற்பெட்டியில் அவதரித்தவர் யார்?

நந்தி தேவர்.

8947. இவர் பொற்பெட்டியில் அவதரிக்க காரணமானவர் கள் யார்?

சிலாத முனிவரும் சித்ராவதியும்.

8948. மகப்பேறு இல்லை என்று சிவனை வேண்டிய வர்கள் யார்?

சிலாத முனிவரும் சித்ராவதியும்.

8949. இவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன் என்ன கூறினார்?

யாகம் செய்வதற்கு நிலத்தை உழுதால் எம்மைப்போல் மகன் தோன்றுவான் என்றார்.

8950. நந்தி தேவர் எத்தனை முறை தவம் செய்தார்?

மூன்று முறை

8951. முதன் முறை தவம் செய்து எதனைப் பெற்றார்?

திருவடியில் நீங்காத அன்பினை

8952. இரண்டாம் முறை என்ன பெற்றார்?

சிறு நிந்தனை, சிவனடியார் நிந்தனை
முதலிய நிந்தனைகளைச் செய்கின்றவர்களை தண்டிக்கும் ஆணையை ஏற்றார்.

8953. மூன்றாம் முறை எதனைப் பெற்றார்?

என்றும் நிலைத்திருக்கும் தன்மையை

8954. நந்தி தேவர் யாரை மணந்தார்?

சுயசையை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812