வியாழன், 15 நவம்பர், 2012

9540) மாலையில் விளக் கேற்றிய பின் தலை வாரலாமா? கூடாது 9541) மாலை நேரம் எதற்குரிய நேரம்? வழிபாட்டுக்குரிய நேரம் 9542) மாலையில் விளக் கேற்றும் வேளை யில் யார் இல்ல த்தில் உறைந்திருப் பதாக கூறப்படுகி றது? திருமகள் 9543) அந்த சமயத்தில் பெண்கள் கூந்தலை விரித்தபடி நிற்பது நல்லதா? நல்லதல்ல 9544) மாலையில் பெண்கள் எப்போது தலைவாரி கொள்ள வேண்டும்? விளக்கு வைப்பதற்கு முன் மாலை 5.30 மணிக்குள் தலைவாரி பூ முடித்து நெற்றியில் திலகமிட்டுக் கொள்வது நல்லது. 9546) திரு என்றால் என்ன? லட்சுமி 9547) மதி என்றால் என்ன? அறிவு 9548) திருமணமான பெண்களை திருமதி என்பது ஏன்? திருமணத்திற்கு முன் பொறுப்பில்லாமல் மற்றும் ஆண்கள் வீணாக செலவழித்து திரிவார்கள். திருமணத்துக்குப் பின் தறிகெட்டு அலையும் கணவனை மனைவி திருத்திவிடுகிறாள். அவள் கணவனின் வரம்பற்ற செலவுகளைக் குறைத்து வீட்டில் செல்வம் நிறைய முயற்சி செய்கிறாள். இதற்காக தனது மதிநுட்பத்தை பயன்படுத்துகிறாள். அந்த வீட்டில் லட்சுமி கடாட்சம் ஏற்படுகிறது. திருவையும் மதியையும் இணைந்தே திருமணமான பெண்களுக்கு திருமதி என்ற பட்டம் ஏற்பட்டது. 9549) பெண்களுக்கு நடத்தப்படும் வளைகாப்புக்கு kமந்தம் என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா? தற்காலத்தில் பெரும்பாலானவர்கள் மாப்பிள்ளை வீட்டில் வளைகாப்பு நடத்தி தாய் வீட்டுக்கு அழைத்து வருகிறார்கள். ஆனால் அக்காலத்தில் தாய் வீட்டுக்கு பெண்ணை வர வழைத்து அங்கு வைத்தே வளைகாப்பு நடக்கும். அப்போது பெண்ணின் தாய் மகளுக்கு லட்சுமியைப் பற்றிய பாடல்களைப் பாடிக் கொண்டே நெற்றி வகிட்டில் முள்ளம் பன்றியின் முள்ளால் லேசாக கீறி குங்குமம் வைப்பார். முள்ளம்பன்றியின் முள்ளால் கீறுவது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு நன்மையைத் தரும். வகிடு என்ற சொல்லின் சமஸ்கிருதப் பெயரே kமந்தம். 9550) பெண்ணுக்கு வளைகாப்பு (kமந்தம்) நடத்துவது ஏன் தெரியுமா? பெண்களின் வகிட்டில் லட்சுமி குடியிருக்கின்றாள். நெற்றியில் பொட்டிட்டால் அவள் சந்தோஷமடைவாள். அப் பெண்ணுக்கு பிறக்கும் குழந்தை செல்வ வளத்துடன் வாழும் என்ற நம்பிக்கையினால் நான் kமந்தம் நடத்துகிறார்கள். 9551) ஒருவர் நம்மை பொறாமையோடு பார்த்தால் என்ன நடக்கும்? நமது மன நிலையும் உடல் நிலையும் பாதிக்கப்படும். 9552) ஒருவர் நம்மை பொறாமையோடு பார்ப்பதால் ஏற்படுவது என்ன தோஷம்? திருஷ்டி தோஷம் 9553) வேறு எவ்வாறு திருஷ்டி தோஷம் ஏற்படலாம்? இவ்வளவு அழகாக வீடு கட்டிவிட்டார்களே என்று யாராவது பொறாமையுடன் பார்த்தால். 9554) வீடுகட்டினால் திருஷ்டி தோஷத்தால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க என்ன செய்வார்கள்? பூசணிக்காய் தொங்கவிடுவர். 9555) பூசணிக்காய் தொங்கவிடுவதால் திருஷ்டி தோஷம் நீங்குமா? இல்லை புதுவீட்டை பார்ப்பவர் கண்களில் பூசணிக்காயும் அதில் வரைந்துள்ள வடிவமும் சிறிது நேரம் படும். புதுவீட்டை முழுமையாகப் பார்ப்பதில் இருந்து அவரது கவனம் சிதறும். இதன் காரணமாக திருஷ்டி தோஷம் குறையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812