புதன், 28 நவம்பர், 2012
சமஸ்கிருதம்
9573. சமஸ்கிருத இலக்கியம் எத்தனை ஆண்டுகளாக தொடர்ந்து வளர்ந்து வருகின்றது?
4000 ஆண்டுகளாக
9574. சமஸ்கிருத இலக்கிய பரப்பினை எத்தனை பெரும் பகுதிகளாக வகுத்துக் கொள்ளலாம்?
மூன்று
9575. அம் மூன்று பெரும் பகுதிகளையும் தருக.
வேத இக்கியம், இதிகாச இலக்கியம், பிற்கால இலக்கியம்.
9576. இருக்கு, யசுர், சாமம், அதர்வம் இவை நான்கும் என்ன?
வேதங்கள்
9577. வேதங்களின் சார்பு நூல்கள் எவை?
பிராணங்கள், ஆரண்யங்கள், உப நிடதங்கள், சூக்தங்கள்
9578. வேத இலக்கியம் என அழைக்கப்படுபவை எவை?
இருக்கு, யசுர், சாம, அதர்வ வேதங்களும் அவற்றின் சார்பு நூல்களான பிராணங்கள் ஆரண்யங்கள், உப நிடதங்கள், சூக்தங்கள் ஆகியனவும் ஆகும்.
9579. இவற்றுள் உலக இலக்கியங்களில் அழகிய கவிதையோடும் சீரிய கருத்துடனும் இன்று எமக்கு கிடைத்துள்ளவற்றுள் மிகப் பழையது எது?
இருக்கு வேதம்
9580. இந்நூல் எவ்வாறு திகழ்கிறது,
பல ரிஷிகள் பல காலங்களில் இயற்றிய 1028 பாடல்களின் தொகுப்பாகத் திகழ்கிறது.
9581. இது எங்கு பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பாக காணப்படுகிறது?
வேள்விகளில்
9582. இதனையும் ஏனைய மூன்று வேதங்களையும் என்னவென்று அழைப்பார்கள்?
சங்கிதைகள்
9583. இருக்கு வேதப் பாடல்களை வேள்வி யிலே பயன்படுத்தும் யாக விதிகளை கூறுவது எது?
யசுர் வேதம்
9584. யசும் வேதம் எந்த நடையில் அமைந்துள்ளது?
வசன நடையில்
9585. யசுர் வேதம் எத்தனை பிரிவுகளைக் கொண்டது?
இரண்டு
9586. அந்த இரண்டு பிரிவுகளையும் தருக.
கிருஷ்ண யசுர் வேதம், சுக்ல யசுர் வேதம்
9587. ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புள்ள, ஒரே வட்டத்தைச் சேர்ந்த மூன்று வேதங்கள் எவை?
இருக்கு, யசுர், சாமம்
9588. இந்த மூன்று வேதத்திலும் கூறப்பட்டுள்ளவை எவை?
வேள்வியிலே பயன்படுத்தப்படும் பாடல்கள், அதற்கான இசை, கிரியை விதிகள்.
9589. பாமர மக்களின் சமய நம்பிக்கை களும் சமூகப் பழக்க வழக்கங்களும் எந்த வேதத்தில் இடம்பெற்றுள் ளன. அதர்வ வேதங் களில்
9590. அதர்வ வேதத்தில் எவ்வாறான பாடல்கள் அதிகம் இடம்பெற்றுள்ளன?
மக்களின் அன்றாட வாழ்வில் ஏற்படும் அல்லல்களை நீக்கவல்ல பாடல்கள்
9591. இந்த நான்கு வேதத் திற்கும் தனித்தனியே என் னென்ன காணப்படு கின்றன?
பிராமணங்கள், ஆரணியங்கள், உபநிடதங்கள்
9592. வேள்விகளுக்கான வேத சூக்தங்கள் வேள்வி விதிகளின் விபரங்கள் விளக்கங்கள் முதலியன எதில் உள்ளன?
பிராமணங்களில்
9593. காட்டில் வாழும் துறவிகளுக்காக எழுதப்பட்டவை எவை?
ஆரணியங்கள்
9594. ஆரணியங்களில் இடம் பெற்றிருப்பது என்ன?
வேள்விகளுக்கான மறை பொருள் விளக்கம்.
9595. ஆரணியங்களைத் தொடர்ந்து தோன்றிய தத்துவ நூல்கள் எவை?
உபநிடதங்கள்
9596. இவை வைதீக சிந்தனையின் சாரமாகவும் முடிவாகவும் இருப்பதால் என்னவென்று கூறப்படுகிறது?
வேதாந்தம்
9597. இவை சூத்திர வடிவில் இருப்பதால் என்னவென்று கூறப்படுகிறது?
சூத்திரங்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
-
16258) அறநெறிக் கல்வியின் “மகுட வாசகம்” என்ன? “கல்வியின் சிறந்த குறிக்கோள் பண்புடைமையே” 16259) அதன் “இலட்சிய நோக்கு” என்ன? சிறார்களி...
-
நமசிவாய என்பதற்கு என்ன பொருள்? சிவனை வணங்குகிறேன் என்பது பொருள். இறைவனின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக