புதன், 7 நவம்பர், 2012

கேதார கௌரி விரதம் அனுஷ்டிக்கும் முறை தண்டாயுதபாணி கோயில் அகந்தையை அழித்திடும் கிருஷ்ணார்ப்பணம் கே. ஈஸ்வரலிங்கம் திருப்பதியில் ஒரே நாளில் ரூ.3 கோடி வசூல் கே. ஈஸ்வரலிங்கம் தெய்வ உபசாரங்கள் 9527) அர்ச்சனை என்ற சொல் எந்த சொல்லில் இருந்து வந்தது? அர்ச்சா 9528) அர்ச்சா என்பதன் பொருள் என்ன? சிலை 9529) அர்ச்சா என்ற சொல்லில் இருந்து வந்த சொற்கள் எவை? அர்ச்சனை, அர்ச்சித்தல், அர்ச்சித்தர் 9530) அர்ச்சித்தர் என்ற சொல்லின் பொருள் என்ன? சிலை 9531) ஆண்டவனுக்கு எத்தனை வகை உபசாரங்கள் செய்யப்படும்? ஆறு 9532) ஆறு வகை உபசாரங்களையும் தருக அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, நைவேத்தியம், ஆராதனை, உற்சவம் 9533) இந்த ஆறு வகை உற்சவங்களில் முக்கியத்துவம் பெறுவது எது? அர்ச்சனை 9534) அபிஷேகம் எவற்றால் செய்யப்படும்? தண்ணீர், பால், தேன், தயிர், பன்னீர், இளநீர் மற்றும் பல பொருட்களால் 9535) அலங்காரம் என்பது என்ன? பட்டு பீதாம்பரத்தாலும், பொன்னாலும் மலர் மாலைகளாலும் தங்க நகைகளாலும் வைர வைடூரியங்களாலும் தெய்வத்தை அழகு படுத்தல் 9536) அர்ச்சனை எவற்றால் செய்யப்படும்? பூக்களாலும் பாக்களாலும் 9537) நைவேத்தியம் என்பது என்ன? பல்வேறு உணவு வகைகள், பால், பழம் முதலியவற்றை படைப்பது 9538) ஆராதனை என்பது என்ன? தூபம் காட்டுதல், தீபம் காட்டுதல் 9539) உற்சவம் என்பது என்ன? பெரு விழா நடத்தி மூர்த்தியை வலமாக வீதிகளில் கொண்டு செல்லுதல். 9540) 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்துவது ஏன்? ஆண்டுதோறும் பண்டிகை வரும்போது வீட்டை சுத்தம் செய்து வர்ணம் தீட்டி கொண்டாடுகிறோம். அதுபோல கடவுள் குடியிருக்கும் கோயிலை 12 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது சுத்தம் செய்து வர்ணம் தீட்டி கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்கிறார் காஞ்சிப் பெரியார். சுவாமி பீடத்தில் சாத்தப்படும் அஷ்டப்பந்தன மருந்து 12 ஆண்டுகளில் வலிமை இழந்து கரையத் தொடங்கும். எனவே புதிதாக மருந்து சாத்தி, திருப்பணிகளையும் செய்துவிட்டால், தெய்வ சாந்நித்யம் குறையாமல் விளங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812