செவ்வாய், 5 மார்ச், 2013

(சிவனின் பெயர்கள்

கே.ஈஸ்வரலிங்கம் 9852) சிவனின் தமிழ்ப் பெயர்களைத் தருக? அடியார்க்கு நல்லான், அம்மையப்பன், உடையான், உலகுடையான், ஒருமாவன், கேடிலி, சொக்கன், தாயுமானவன், தான்தோன்றி, தூக்கிய திருவடியன், தென்முகநம்பி, புற்றிடங்கொண்டான், நடவரசன், பெருந்தேவன், பெருவுடையான், மாதொருபாகன், மணவழகன், வழித்துணையான். 9853) சிவனின் திருநாமத்தில் அடியா ருக்கு நல்லான் என்ற பெயருக்கு வடமொழி பெயர் என்ன? பக்தவத்சலன் 9854)அம்மையப்பன் என்ற தமிழ் சொல்லுக்கு உரிய வடமொழி சொல் என்ன? சாம்பசிவன் 9855) உடையான் என்ற பெயருக்குரிய வடமொழி பெயர் என்ன? ஈஸ்வரன் 9856) உலகுடையான் என்பதற் குரிய வடமொழி சொல் என்ன? ஜகதீஸ்வரன் 9857) ஒருமாவன் என்ற பதத்திற்குரிய வடமொழி பதம் என்ன? ஏகாம்பரன் 9858) கேடிலி என்பதற்குரிய வடமொழிச் சொல் என்ன? அட்சயன் 9859) சொக்கன் என்பதற்குரிய வடமொழிச் சொல் எது? சுந்தரன் 9860) மாத்ருபூதம் என்ற வடமொழிச் சொல்லுக்குரிய தமிழ் பதம் என்ன? தாயுமானவன் 9861) சுயம்பு என்பதற்குரிய தமிழ் பதம் என்ன? தான்தோன்றி 9862) குஞ்சிதபாதன் என்ற பதத்துக்குரிய தமிழ் பதம் என்ன? தூக்கியதிருவடியன் 9863) தென்முக நம்பி என்பது யாரை? தட்சிணாமூர்த்தியை 9864) புற்றிடங்கொண்டான் என்பதற்குரிய வடமொழி பதம் என்ன? வன்மீகநாதன் 9865) நடவரசன் என்பதற்குரிய வடமொழிச் சொல் என்ன? நடராஜன் 9866) பெருந்தேவன் என்பதற்குரிய வடமொழி நாமம் என்ன? மகாதேவன் 9867) பெருவுடையான் என்பதற்குரிய வடமொழி பதம் என்ன? பிருகதீஸ்வரர் 9868) மாதொருபாகன் என்பதற்குரிய வடமொழி நாமம் என்ன? அர்த்தநாரி 9869)மணவழகன் என்பதற்குரிய வடமொழி நாமம் என்ன? கலியாண சுந்தரர் 9870) வழித்துணையான் என்பதற்குரிய திருநாமம் என்ன? ¡ர்க்கசகாயன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812