ஞாயிறு, 24 மார்ச், 2013

பங்குனி உத்திரம்

கே.ஈஸ்வரலிங்கம் (பங்குனி உத்திரம்) 9904) சிவனை கல்யாண சுந்தரமூர்த்தியாக நினைத்து விரதம் இருப்பது எந்த நாளில்? பங்குனி உத்திர நாளில் 9905) தேவர்களின் தலைவன் யார்? இந்திரன் 9906)இந்திரன் மணந்தது யாரை? இந்திராணியை 9907) இந்திரன் இந்திராணியை மணந்தது எந்த விரதம் அனுஷ்டித்து? பங்குனி உத்திரம் விரதம் அனுஷ்டித்து 9908) மகாலட்சுமி யாரை மணந்தார்? மகா விஷ்ணுவை 9909) மகா லட்சுமி மகா விஷ்ணுவை மணந்தது எந்த விரதம் அனுஷ்டித்து? பங்குனி உத்திர விரதம் அனுஷ்டித்து 9910) தன் நாவில் சரஸ்வதி இருக்கும் வாய்ப்பை பெற்றது, பிரம்மா 9911) பிரம்மா எந்த விரதம் அனுஷ்டித்து நாவில் சரஸ்வதி இருக்கும் வரத்தை பெற்றார்? பங்குனி உத்திர 9912) சந்திரன் எத்தனை கன்னிகளை மனைவியாக அடைந்தார்? 27 கன்னிகளை 9913) சந்திரன் 27 கன்னிகளை மனைவியாக அடைந்தது எந்த விரதத்தை கடைப்பிடித்து? பங்குனி உத்திர விரதம் 9914) இமவான் தன் மகள் பார்வதியை சிவனுக்கு திருமணம் செய்ய தேர்ந்தெடுத்தது எந்த நன்னாளை? பங்குனி உத்திர நன்னாளை 9915) ஆற்று மணலை சிவலிங்கமாக பிடித்து வழிபட்டு சிவனின் அருளைப் பெற்றது எப்போது? பங்குனி உத்திர நன்னாளில் 9916) இவ்வாறு ஆற்று மணலை சிவலிங்கமாக பிடித்து வழிபட்டது எந்த அம்மன்? காஞ்சி காமாட்சி அம்மன் 9917) ராமர் சீதையை மணந்தது எப்போது? பங்குனி உத்திரத்தில் 9918) லட்சுமணனுக்கு திருமணம் நடந்தது எப்போது? பங்குனி உத்திரத்தில் 9919) சத்ருகனின் திருமணம் நடந்தது எப்போது? பங்குனி உத்திரத்தில் 9920) காவடி தூக்கும் பழக்கம் ஆரம்பித்த நாள் எது? பங்குனி உத்திரத்தில் 9921) காவடி தூக்கும் பழக்கம் யார் மூலம் ஆரம்பிக்கப்பட்டது? இடும்பன் 9922) திருப்பரங்குன்றத்தில் நடந்தது யாருடைய திருமணம்? முருகன் பெருமானின் 9923) திருப்பரங்குன்றத்தில் முருகன் மணம் முடித்தது யாரை? தெய்வானையை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812