திங்கள், 25 மார்ச், 2013

திருபாற் கடல்

கே.ஈஸ்வரலிங்கம் 9924) அமுதம் எடுக்க திருப்பாற் கடலை கடைந்தவர்கள் யார்? அறுபத்தாறு முப்பத்து முக்கோடி தேவர்களும் அசுரர்களும் 9925) இவர்கள் திருபாற் கடலை கடைய மத்தாக எடுத்தது எதனை? மந்திரமலையை 9926) கயிறாக எடுத்தது எதனை? பாம்பை 9927) அந்த பாம்பின் பெயர் என்ன? வாசுகி 9928) பாம்பு, மத்து இவற்றுடன் வேறு என்ன போட்டார்கள்? மூலிகைகளை 9929) இவர்கள் திருபாற்கடலை எப்போது கடைய ஆரம்பித்தார்கள்? கார்த்திகை மாத ஏகாதசி திதியில் 9930) இவர்கள் என்னென்ன மந்திரங்களைச் சொல்லி பாற்கடலை கடைந்தார்கள்? மகாலக்சுமி மந்திரமலை ஸ்ரீசுக்தம், ஸ்ரீமந்திரம் 9931) இவர்கள் பாற்கடலை கடைந்த போது என்ன நடந்தது? மந்திரமலை கடலிலே மூழ்கிச் சென்றது. 9932) மந்திரமலை கடலில் மூழ்கிச் செல்வதைக் கண்ட திருமால் என்ன செய்தார்? ஆமை உருவமாக மாறி அந்த மந்திர மலையை தாங்கினார். 9933) தேவர்களும் அசுரர்களும் மாறி மாறி இழுத்ததால் வாசுகிக்கு வலி பொறுக்க முடியாமல் என்ன நடந்தது? விஷத்தைக் கக்கியது. 9934) வாசுகி விஷத்தை கக்கியதும் என்ன நடந்தது? கடலிலே ஆலகால விஷம் தோன்றியது 9935) அந்த ஆலகால விஷம் என்ன செய்தது? அனைவரையும் தாக்கியது 9936) அந்த விஷத்தினால் தாக்கப்பட்ட அசுரர்களுக்கு என்ன நடந்தது? உடல் கறுப்பாகி மாறியது 9937) அதனை தாங்க முடியாத தேவர்கள் என்ன செய்தார்கள்? சிவபெருமானை வேண்டினார்கள். 9938) சிவபெருமான் என்ன செய்தார்? சுந்தரரை அழைத்து அந்த விஷத்தை எடுத்து வரும்படி கூறினார். 9939) சுந்தரர் அந்த விஷத்தை எடுத்து வந்ததால் அவருக்கு ஏற்பட்ட பெயர் என்ன? ஆலகால சுந்தரர் 9940) சுந்தர் எடுத்து வந்த விஷத்தை சிவபெருமான் என்ன செய்தார்? உண்டார் 9941) சிவபெருமான் அந்த விஷத்தை உண்டது எப்போது? சனிக்கிழமை பிரதோஷ காலத்தில் மாலை 4.30 - 6.00 க்கும் இடைப்பட்ட நேரத்தில் 9942) சிவபெருமான் விஷத்தை உண்டதை கண்ட பார்வதி என்ன செய்தார்? அதனை கண்டத்திலே நிறுத்தினார். 9943) இவர் இவ்வாறு கண்டத்திலே நிறுத்தியதால் சிவபெருமானுக்கு ஏற்பட்ட பெயர் என்ன? நீலகண்டேஸ்வரர். 9944) மீண்டும் திருப்பாற்கடலை கடைந்த போது என்ன வந்தது? காமதேனு 9945) அந்த காமதேனுவை யார் எடுத்துக் கொண்டது யார்? வசிட்டர் முனிவர் இதில் தோன்றிய வெள்ளைகுதிரையை யார் எடுத்துக்கொண்டது? சப்த சிரேஷ்சிலியில் ஒருவரான அசுர தலைவன் மகாவலி 9946)4 கொம்புகளுடன் என்ன தோன்றியது சிவப்பு மணி 9947)சிவப்பு மணியை யார் எடுத்தார்? மகாவிஷ்ணு எடுத்து மார்பிலே பத்திரமாக அணிந்து கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812