திங்கள், 8 ஜூன், 2015
திருமணத்தின் ஏழு அடிகள்
(11362) திருமணத்தின்போது அக்னியை சுற்றி எத்தனை அடிகள் நடப்பார்கள்?
ஏழு அடிகள்.
(11363) சம்ஸ்கிருதத்தில் இதை என்ன என்று கூறுவார்கள்?
சப்தபதி.
(11364) ஏழு அடிகள் நடப்பதற்கு என்ன பொருள்?
ஏழு அடிகள் நடக்கும்போது மாப்பிள்ளை பெண்ணிடம் இறைவன் உனக்கு துணையிருப்பான் என்று தனது பிராத்தனையைச் சொல்கிறான்.
(11365) முதல் அடியில் என்ன பிரார்த்தனையை சொல்கிறான்?
பஞ்சமில்லாமல் வாழ வேண்டும்.
(11366) இரண்டாம் அடியில் என்ன பிரார்த்தனையை சொல்கிறான்?
ஆரோக்கியமாக வாழ வேண்டும்.
(11367) மூன்றாம் அடியில் என்ன பிரார்த்தனையை சொல்கிறான்?
நற்காரியங்கள் எப்பொழுதும் நடக்க வேண்டும்.
(11368) நான்காவது அடியில் என்ன பிரார்த்தனையை சொல்கிறான்?
சுகத்தையும், செல்வத்தையும் அளிக்க வேண்டும்.
(11369) ஐந்தாவது அடியில் என்ன பிரார்த்தனையை சொல்கிறான்?
லக்ஷ்மி கடாக்ஷம் நிறைந்து பெறவேண்டு.
(11370) ஆறாவது அடியில் என்ன பிராத்தனையை சொல்கிறான்?
நாட்டில் நல்ல பருவங்கள் நிலையாக தொடரவேண்டும்.
(11371) ஏழாவது அடியில் என்ன பிரார்த்தனையை சொல்கிறான்?
தர்மங்கள் நிலைக்க வேண்டும்.
(11372) இரண்டு நபர்கள் ஒன்றாக ஏழு அடிகள் நடந்தால் என்ன நடக்கும் என்று சாஸ்திரம் கூறுகின்றது?
அவர்களுக்குள் சினேகிதம் உண்டாகும்.
(11373) நாம் வீதியில் நடக்கும்போது அறிமுகமில்லாத ஒருவருடன் சில விநாடிகள் ஒன்றாய் நடக்க நேர்ந்தால் என்ன நடக்கும்?
ஏழு அடிகள் நடப்பதற்குள் நாம் அவர்களை வேகமாக தாண்டிவிடுவோம் அல்லது அவர்களை முன்னே போக விட்டு விடுவோம். முழுமையாக ஏழு அடிகள் ஒன்றாக நடக்க மாட்டோம்.
(11374) இரண்டு மனிதர்கள் ஒன்றாக நடக்கும்போது அவர்களுக்குள் என்ன நடக்கும்?
இரண்டு மனிதர்கள் ஒன்றாக நடக்கும்போது அவர்களுக்குள் நடக்கும் மனோவியல் மாற்றங்கள் ஏழு அடிகளுக்குள்ளாக நடந்து விடும் என்பது ஒரு சூக்ஷயமமான விஷயம்.
(11375) இதை மிகவும் நுணுக்கமாக ஆராய்ந்து இந்து தர்மத்தில் என்ன செய்தார்கள்?
அதை ஒரு சம்பிரதாயமாக வைத்தார்கள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
-
16258) அறநெறிக் கல்வியின் “மகுட வாசகம்” என்ன? “கல்வியின் சிறந்த குறிக்கோள் பண்புடைமையே” 16259) அதன் “இலட்சிய நோக்கு” என்ன? சிறார்களி...
-
நமசிவாய என்பதற்கு என்ன பொருள்? சிவனை வணங்குகிறேன் என்பது பொருள். இறைவனின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக