ஞாயிறு, 17 ஜூன், 2018

தாம்பூலம்



வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது ஏற்படும் நன்மை என்ன?
அந்த சுவை உடலையும் மூளையையும் சுறுசுறுப்படைய செய்கிறது அதே நேரம் இதயத்தையும் வலுப்படுத்துகிறது.

மனித உடலுக்கு நோய் ஏன் வருகிறது என்பதற்கு ஆயுர்வேதம் காரணம் என்ன?
உடம்பில் உள்ள வாதம், பித்தம், சிலேத்துமம் போன்றவைகள் சரியான விகிதத்தில் இல்லாமல் கூடும் போதோ குறையும் போதோ நோய் வருகிறது.

வாதம், பித்தம், சிலேத்துமம் ஆகிய மூன்று சத்துக்களும் சரியான கோணத்தில் உடம்பில் அமைந்துவிட்டால் என்ன நடக்கும்?
நோய் வராது என்பதை விட நோயை எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடம்பிற்கு வரும்.

இந்த மூன்று நிலைகளையும் சரியானபடி வைக்க எது உதவி செய்கிறது?
தாம்பூலம்

பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு என்ன செய்யும்?
பித்தத்தை கண்டிக்கும்

சுண்ணாம்பில் உள்ள காரம் என்ன செய்யும்?
வாதத்தை போக்கும்.

வெற்றிலையில் உள்ள உரைப்பு என்ன செய்யும்?
கபத்தை நீக்கி விடும்.

தாம்பூலம் போடுவதால் என்ன நன்மை?
உடம்பில் உள்ள மூன்று தோஷங்களையும் முறைபடுத்தும் நிலை அமைந்து விடுகிறது.

தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலம், கிராம்பு, ஜாதிபத்திரி போன்றவைகள் என்ன செய்யும்?
வாயில் உள்ள கிருமிகளை மட்டுபடுத்துகிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது.

எந்த நிகழ்வுகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்கு கொடுக்கப்படுகிறது?
விருந்துகளில்

தாம்பூலம் போடுவது எந்த இடத்தில் கெட்ட பழக்கமாக மாறுகிறது?
வெற்றிலை பாக்கு சுண்ணாம்போடு புகையிலையும் சேரும் போது தீய பழக்கமாக மாறி விடுகிறது.

நமது முன்னோர்களின் தாம்பூலத்தில் எது கிடையாது?
புகையிலை. புகையிலை என்பது இடையில் சேர்க்க பட்ட தீய பழக்கமாகும்.


முன்பு முதியவர்களுக்கு எலும்பு முறிவு என்பது அவ்வளவு சீக்கிரம் ஏற்படாது. இதற்கு காரணம் என்ன?
அவர்களிடமிருந்த தாம்பூலம் தரிக்கும் பழக்கமே ஆகும்.

இதற்கு என்ன காரணம்?
ஒரு குறிப்பிட்ட அளவு சுண்ணாம்பு சத்து உடம்பிற்கு நேராக கிடைக்கும் போது எலும்புகள் வலுப்பட்டு விடுகிறது.

தாம்பூலம் போடுவதற்கென்று தனிப்பட்ட நெறிமுறையே நமது முன்னோர்களால் வகுக்கபட்டிருக்கிறது. காலையில் சிற்றுண்டிக்கு பிறகு போடும் தாம்பூலத்தில் என்ன அதிகமாக இருக்க வேண்டும்?
பாக்கு

இதற்கு காரணம் என்ன?
மதிய நேரம் வந்து வெப்பம் அதிகமாகும் போது உடம்பில் பித்தம் ஏறாமல் அது பாதுகாக்கும்.

அதே போல மதிய உணவிற்கு பின் எது அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்?
சுண்ணாம்பு சத்து

அது என்ன செய்யும்?
உணவில் உள்ள வாதத்தை அதாவது வாயுவை கட்டுபடுத்தும்.

இரவில் எதை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்?
வெற்றிலையை

இரவில் வெற்றிலையை அதிகமாக எடுத்துக் கொள்வதால் என்ன நன்மை?
நெஞ்சில் கபம் தங்காது

தாம்பூலம் தரிப்பதில் நமது முன்னோர்களின் கட்டளை என்ன?
மேற்குறிப்பிடப்பட்ட முறையில்தான் தாம்பூலம் தரிக்க வேண்டும். இதை மீறும் போதுதான் சிக்கல் வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812