திங்கள், 8 நவம்பர், 2010

அறநெறி அறிவு நொடி

கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர், ஸ்தாபகர்,

தமிழர் நற்பணி மன்றம்


8146 மகா விஷ்ணு எத்தனை முறை மோகினி ரூபம் எடுத்தார்?

மூன்று முறை.

8147 திருபாற்கடலை கடைந்து பெறப்பட்ட அமிர்தத்தை அசுரர்களிடமிருந்து தேவர்களுக்காக பெற்றுக் கொடுப்பதற்காக விஷ்ணு பகவான் என்ன வடிவம் எடுத்தார்?

மோகினி.

8148 பஸ்மா சூரனின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் வரம் தந்து அருள, அந்த வரத்தாலேயே சிவபெருமானை அந்த அசுரன் பஸ்மம் செய்ய முற்பட்ட பொழுது மோகினி ரூபம் எடுத்து அந்த அசுரனை அழித்தவர் யார்?

விஷ்ணு பகவான்.

8149 தன்னைக் காப்பாற்றிய மோகினியை காணும் ஆவலில் இருந்த சிவபெருமான், மோகினி யின் அழகில் மயக்கம் கொண்டதன் காரணமாக யாரின் வரலாறு நிகழ்ந்தது?

ஐயப்பனின்.

8150 ஞான மார்க்கத்தையும் பக்தி மார்க்கத்தையும் கைவிட்டு கர்ம மார்க்கத்தில் சென்ற வனதுர் ஷிகிளை நல்வழிப்படுத்த பிக்ஷ¡டன ரூபம் எடுத்தவர் யார்?

சிவபெருமான்.

8151 திருமால் என்ன ரூபம் எடுத்தார்?

மோகினி ரூபம்.

8152 ‘ஐயப்பன்’ என்ற பெயர் எதில் இருந்து வந்தது?

சூரியன் என்பதிலிருந்து.

8153 ‘சூரியன்’ என்பதற்கு என்ன பொருள்?

மதிக்கத்தக்கவர்.

8154 ‘தாதா’ என்பதன் அர்த்தம் என்ன?

தந்தை.

8155 ‘ஐயப்பன்’ என்றானது எது?

சூர்ய தாதா.

8156 தமிழ் நாட்டில் ‘சாத்தன் ஐயனார்’ என்ற பெயரில் நெடுங்காலமாக வணங்கி வருவது யாரை?

ஐயப்பனை.

8157 பரபிரம்மமாக திகழ்பவர் யார்?

ஐயப்பன்.

8158 ஐயப்பனை சரணடைவதற்கு காரணம் என்ன?

பக்தர்களது நிலைக்கு ஏற்ப ரூபியாகவும் அரூபியாகவும் சகுணராகவும் நிர்குணராகவும் காட்சி தருவதால்.

8159 ‘அஹம் பிரம்மாஸ்மி’ எனப்படும் அத்வைத் போதம் பெறுகின்றவர்கள் யார்?

ஐயப்ப பக்தர்கள்.

8160 பகவானை அடைய சிறந்த வழி எது?

சரணாகதி.

8161 ஸ்ரீ ‘தர்ம சாஸ்தா’ என்பதன் பொருன் என்ன?

தர்மத்தின் காவலன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812