திங்கள், 22 நவம்பர், 2010

அறநெறி அறிவு நொடி

கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர்/ ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்



இறை உருவங்களுக்கான அணிகலன்கள்

8180) இறை உருவங்களுக்கு அணிவிக்கப்படும் அணிகலன்கள் எவை?

மகுடம், குண்டலம், கண்டி, ஆரம், கேயூரம், யக்கோபவிதம், உதர பந்தம்,

சன்னவீரம், கடி சூத்திரம், ஊருமாலை, கண்டமாலை.

8182) இவற்றில் தலைக்கு மேல் அணியப்படுவது ஏது? மகுடம்

8183) கிரீடத்தின் வகைகளைத் தருக

கிரீட மகுடம், கரண்ட மகுடம், சடா மகுடம், ஜீவால மகுடம்

8184) திருமாலின் தலையில் இடம்பெறுவது என்ன?

கிரீட மகுடம்

8185) தேவியர் மற்றும் முருகன் கணபதி ஆகியோர்களுக்கு அமைக்கப்படுவது என்ன மகுடம்?

கரண்ட மகுடம்

8186) சடையையே மகுடம் போல அமைப்பதை என்னவென்று கூறுவர்?

சடா மகுடம்

8187) சிவனுக்கு அமைக்கப்படும் மகுடம் எது?

சடா மகுடம்

8188) மாரியம்மன், காளி முதலான இறை உருவகங்களுக்கு அணிவிக்கப்படும் மகுடம் எது? ஜீவால மகுடம்

8189) ஜீவால மகுடத்தை வேறு எவ்வாறு அழைப்பர்? தீக்கிரீடம்

8190) காதில் அணியப்படும் அணிகலன்களை என்னவென்பர்?

குண்டலம்

8191) குண்டலம் எத்தனை வகைப்படும்? இரண்டு

8192) இரண்டு வகையான குண்டலங்களையும் தருக?

பத்ர குண்டலம், மகர குண்டலம்

8193) விஷ்ணுவுக்குரிய குண்டலம் என்ன?

மகர குண்டலம்

8194) சிவபெருமானது காதணிகளாக வலது காதில் இடம்பெறும் குண்டலம் எது?

பத்ர குண்டலம்

8195) சிவனின் இடது காதில் என்ன இருக்கும்? தோடு

8196) சிவனின் இடது காதில் தோடு இருப்பதற்கு உரிய காரணம் என்ன?

சிவனின் இடது புறப் பாதி உடல் சக்தியின் அம்சமாக காட்டப்படுவதாலே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812