திங்கள், 29 நவம்பர், 2010

அறநெறி அறிவு நொடி

கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர்/ ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்

8197)கழுத்தை ஒட்டி அமையும் அணிகலன் எது?

கண்டமாலை

8198)கண்டமாலையை வேறு எவ்வாறு அழைப்பர்?

கண்டிகை

8199) கழுத்திலிருந்து மார்பு வரை தொங்கும் மாலையை என்னவென்று அழைப்பர்?

ஆரம்

8200) மேற்கையின் நடுவில் அணியும் அணி கலன் எது?

கேயூரம்

8201) பூணூல், இடது தோளிலிருந்து வலப்புற இடுப்புவரை காணப்படுவதை என்னவென்று கூறுவர்?

யக்ஞோபவிதம்

8202) மார்பிற்குக் கீழும் உந்திக்கு மேலும் அணியப்படும் பட்டையான அணிகலன் என்னவென்று கூறுவர்?

உதரபந்தம்

8203) ஒன்றையொன்று குறுக்கிட்டுச் செல்லும் இரு பூணூல்களைப் போன்ற அமைப்பை என்னவென்று கூறுவர்?

சன்னவீரம்

8204) சன்னவீரம் அணிவிக்கப்படுவது யாருக்கு?

ஆண், பெண் தெய்வங்களுக்கு

8205) சன்னவீரம் அணிவிக்கப்பட்டிருக்கும் சில தெய்வங்களைத் தருக.

சுப்ரமண்யர், இந்திரன், தடாதகைப்பிராட்டி

8206) ஒட்டியானம் போன்ற அமைப்பினை உடைய அணிகலன் எது?

கடி சூத்திரம்

8207) கடிசூத்திரத்தின் நடுவில் என்ன இருக்கும்?

சிங்கம் அல்லது யாளிமுகம்

8208 )சிலம்பு எனும் அணிகலன் யாருக்கு உரியது?

மகளிருக்கு

8209) ஆடவருக்கு உரிய அணிகலன் எது?

கழல்

8210) இறை உருவங்களுக்கு அணிவிக்கப்படும் அணிகலன்களின் வகைகளைத் தருக?

தலையணி வகை, கழுத்தணி வகை, காதணி வகை, மூக்கணி வகை, கையணி வகை, கைவிரலணி வகை, இடையணி வகை, துடையணி வகை, கால் விரலணி வகை
அறநெறி அறிவு நொடி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812