திங்கள், 4 ஜூலை, 2011
அறநெறி அறிவுநொடி
கே. ஈஸ்வரலிங்கம்,
தலைவர், ஸ்தாபகர்
தமிழர் நற்பணி மன்றம்
தாம்பூலம்
8586) வெற்றிலையில் நுனியில் யார் இருப்பதாக கூறப்படுகிறது?
லட்சுமி
8587) வெற்றிலையின் நடுவில் யார் இருப்பதாக கூறப்படுகிறது?
சரஸ்வதி
8588) காம்பில் யார் வாசம் செய்வதாக கூறப்படும்?
பார்வதி தேவி
8589) சுபநிகழ்ச்சிகளில் விருந்துக்குப் பிறகு வெற்றிலை பாக்கு கொடுப்பது ஏன்?
வெற்றிலைக்கு ஜீரணத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் இருப்பதால்
8590) தேவர்களும் அசுரர்களும் பாற் கடலைக் கடைந்தபோது பாற்கடலில் இருந்து எவை வெளிப்பட்டன?
ஐந்து பசுக்கள்
8591) அந்த ஐந்து பசுக்களின் பெயர்களையும் தருக?
நந்தா, பத்திரை, சுரபி, சுசீலை, சுமனை
8592) இந்த ஐந்து பசுக்களும் எந்த நிறங்களைக் கொண்டிருந்தன?
பொன்னிறம், கருமை, வெண்மை, புகை, சிவப்பு
8593) பசுவிலிருந்து கிடைக்கும் ஐந்து விதமான கவ்வியங்களும் தருக.
கோமயம் (சாணம்), கோமூத்திரம் (கோமியம்), பால், தயிர், வெண்ணெய்
8594) இந்த ஐந்து கவ்யங்களயும் கலந்து சிவபெருமானுக்கு செய்யும் அபிஷேகத்தை என்னவென்பர்?
பஞ்சகவ்ய அபிஷேகம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
-
16258) அறநெறிக் கல்வியின் “மகுட வாசகம்” என்ன? “கல்வியின் சிறந்த குறிக்கோள் பண்புடைமையே” 16259) அதன் “இலட்சிய நோக்கு” என்ன? சிறார்களி...
-
நமசிவாய என்பதற்கு என்ன பொருள்? சிவனை வணங்குகிறேன் என்பது பொருள். இறைவனின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக