திங்கள், 26 செப்டம்பர், 2011
கே. ஈஸ்வரலிங்கம்,
(தலைவர் ஸ்தாபகர்
தமிழர் நற்பணி மன்றம்)
(புரட்டாதி சனி)
8674) ஈஸ்வரப் பட்டம் பெற்றவர்கள் எத்தனை பேர்?
இருவர்
8675) ஈஸ்வரப் பட்டம் பெற்றவர்கள் இருவரின் பெயர்களையும் தருக. இராவணேஸ்வரன், சனீஸ்வரன்.
8676) அவரவர் வினைக்கேற்ப பலன்களை வழங்குவதில் நீதி தவறாதவர் யார்?
சனீஸ்வரன்
8677) சனீஸ்வரனின் தினம் எது?
சனிக்கிழமை
8678) சூரியபகவானின் மனைவி யார்?
சாயாதேவி
8689) சாயாதேவியிடம் தோன்றியவர் யார்?
சனீஸ்வரன்
8680) சனீஸ்வரன் எப்போது தோன்றினார்?
புரட்டாதி மாத முதற்சனி வாரத்தன்று.
8081) சனிபகவானை வேறு எவ்வாறு அழைப்பர்?
சாயாபுத்திரன்
8682) சாயாபுத்திரனை வழிபடுவோருக்கு என்ன பலன் கிடைக்கும்?
நீண்ட ஆயுளும் துன்பமில்லாத வாழ்வும்
8683) சாயாபுத்திரனின் உடன்பிறப்புக்கள் யார்?
சாவர்ணிமனு, பத்திரை
8684) சனிக்கு அதிபதி யார்?
மகாவிஷ்ணு
8685) சனிக்கிழமைகளில் என்ன பாராயணம் செய்யலாம்?
விஷ்ணு சகஸ்ரநாமம்
8686) சனி பகவானுக்குரிய தானியம் எது?
கறுப்பு எள்.
8687) சனீஸ்வரன் பெற்ற பதவி என்ன?
கிரகபதவி
8688) சனீஸ்வரர் யாரை வழிபட்டு கிரக பதவி பெற்றார்.
காசிக்குச் சென்று விசுவாதிரை
8689) எந்த கோயில்களில் சனி வழிபாடு செய்வது நல்லது?
சிவன் கோயில்களில்
8690) சிவன் கோயில்களில் சென்று சனி வழிபாடு செய்வது சாலச் சிறந்தது என்று ஏன் கூறப்படுகிறது?
சனீஸ்வரன் தாசி விசுவாதிரை வழிபட்டு கிரகபதவி பெற்றதால்
8691) சனிதோஷம் உள்ளவர் கள் புரட்டாதி மாதத்து சனிக்கிழமைகளில் என்ன செய்ய வேண் டும்?
காலையில் நல்லெண்ணெய் ஸ்நானம் செய்து ஆலயம் சென்று கறுப்புத் துணியில் எள்ளை சிறு பொட்டலமாகக் கட்டி எள்ளெண்ணெய் (நல்லெண்ணெய்) விட்டு விளக்கேற்றி அசர்ச்சனை செய்து சனீஸ்வர தோத்திரம் பாடி சனீஸ்வரனை வழிபட வேண்டும்.
8692) சனீஸ்வரனை வழிபட்ட பின் என்ன செய்ய வேண்டும்?
சிவ விஷ்ணுக்களை வழிபட்டு பிரார்த்தித்து கோளாறு பதிகம், தேவாரம் ஓடி அல்லது விஷ்ணு தோத்திரம் பாடி துதிக்க வேண்டும். வீடு சென்று உணவருந்தி விரதத்தை முடிக்க வேண்டும்.
8693) சனீஸ்வரனின் வாகனம் எது?
காகம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
-
16258) அறநெறிக் கல்வியின் “மகுட வாசகம்” என்ன? “கல்வியின் சிறந்த குறிக்கோள் பண்புடைமையே” 16259) அதன் “இலட்சிய நோக்கு” என்ன? சிறார்களி...
-
நமசிவாய என்பதற்கு என்ன பொருள்? சிவனை வணங்குகிறேன் என்பது பொருள். இறைவனின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக