திங்கள், 5 செப்டம்பர், 2011


கே. ஈஸ்வரலிங்கம்
தலைவர், ஸ்தாபகர்,
தமிழர் நற்பணி மன்றம்

8653) திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும் அனைத்து இடங்களிலும் வாழை மரம் கட்டுவது ஏன்?

மனிதன் தலைமை பெற வேண்டும். தன்னைச் சார்ந்திருப்பவர்களுக்கு பல வழிகளிலும் பயன்தர வேண்டும் என்றும் அவன் குலம் வழியாக தழைக்கவும் என்பதை உணர்த்துவதற்காகத்தான் சுபகாரியப் பந்தலில் வாழை மரம் கட்டுகின்றனர்.

8654) முக்கனிகளுள் எல்லா காலங்களிலும் கிடைக்கக் கூடிய கனி எது?

வாழை

8655) வாழையின் சிறப்பியல்பு என்ன?

வாழை தன்னை அழித்துக் கொண்டு பிறருக்கு கனி தரும்.

8656) மணமக்களை வாழ்த்தும் போது எவ்வாறு வாழ்த்துவார்கள்?

ஆல்போல் தழைத்து அறுகு போல் வேரோட வேண்டும்.

8657) நீங்கள் வாடகை அல்லது சொந்த வீட்டுக்கு குடியேறும்போது அந்த வீட்டுக்குள் முதலில் கொண்டு செல்ல வேண்டியவை எவை?

உப்பு, மஞ்சள் தூள், அல்லது மஞ்சள் கிழங்கு, ஒரு நிறை குடம் தண்ணீர், குல தெய்வத்தின் படம் அல்லது இஷ்ட தெய்வத்தின் படம்.

8658) உப்பு எந்த தெய்வத்தின் அம்சம்?

மகாலட்சுமியின்

8659) மஞ்சள் எந்த தெய்வத்தின் அம்சம்?

அம்மனின்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812