திங்கள், 19 செப்டம்பர், 2011

ஸ்ரீ சாமுண்டீஸ்வரி ஆலயத்தில் ...

கொழும்பு - 15, மட்டக்குளி, கதிரான வத்த, எக்கமுத்துபுர ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் அண்மையில் நடைபெற்றது. இவ் உற்சவம் கடந்த 2 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

அன்று தொடக்கம் உற்சவகாலம் முடியும் வரை தினமும் அம்பாளுக்கு ஸ்நபன அபிஷேகமும் வசந்த பூஜையும் நடைபெற்றதுடன் வேட்டைத் திருவிழா, சங்காபிஷேகம், திருவிளக்கு பூஜை, மாவிளக்கு பூஜை, தேர்த்திருவிழா, தீ மிதிப்பு தீர்த்த உற்சவம் திருவூஞ்சல் திருவிழா, வைரவர் மடை என்பன நடைபெற்றன.

வைரவர் மடையின் போது இவ்வாலயத்தின் வளர்ச்சிக்கு பல்வேறு வகையிலும் உதவி நல்கி வருபவர்களும் ஆலய உற்சவத்தை சிறப்பு நடத்த உதவியவர்களும் பொன்னாடை போர்த்தி, வாழ்த்துப் பா பாடி, வாழ்த்து மடல் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் ஆலய நிர்வாக சபையின் தலைவர் சந்திரசேகர் தலைமையில் ஆலய பிரதமகுரு ரவீந்திர குருக்கள், சோமசுந்தர தியாகராஜா குருக்கள், கலாநிதி ஸ்ரீ ரங்குநாதன், சந்திரகுமாரன், அன்டனி, கே. பத்மராஜா, முருகையா, தர்மராஜா ஆகியோர் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டனர்.

அமரசேகரன் பஞ்சலிங்கம், யோகேந்ரன், மயில்வாகனம் திருமதி ரமேஸ், ராதாகிருஷ்ணன், ஸ்ரீதரன், பூசாமி கமலேஸ்வரன் ஆகியோர் சந்தன மாலை அணிவித்து கெளரவிக்கப்பட்டனர்.

இவ்வாலயத்தில் அறநெறி பாடசாலையை நடத்தி வரும் வள்ளுவர் அறநெறி மன்றத்தின் ஸ்தாபகரும் தலைவருமாகிய கே. பத்மராஜா தலைமையில் ஆலய நிர்வாக சபையினர் பொன்னாடை போர்த்தி வாழ்த்து மடல் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

ஆலய நிர்வாக சபையினர் கடந்த இரண்டு வருடங்களாக சிறப்பாக சேவையாற்றி வருவதால் இங்கு கெளரவிக்கப்பட்ட

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812