திங்கள், 12 டிசம்பர், 2011


கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர் ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்

8824. மாரியம்மனாக வழிபடும் ரிஷிபத்தினி யார்?

ஜமதக்னி ரிஷியின் மனைவியான ரேணுகாதேவி.

8825. கண்ணன் எந்த பாம்பின் மீது நடனம் ஆடினார்?

காளிங்கன்.

8826. தேவர்களின் குருவாக இருப்பவர் யார்?

பிருகஸ்பதி (வியாழன்)

8827. குதிரை முகம் கொண்ட பெருமாள் யார்?

ஹயக்ரீவ மூர்த்தி

8828. கூத்தப்பன் என்று போற்றப்படும் இறைவன் யார்?

நடராஜர் (கூத்து என்றால் நடனம்)

8829. விநாயகர் மீது சங்கரர் பாடிய பாடல் என்ன?

கணேச பஞ்சரத்னம்.

8830. வள்ளலாருக்கு அண்ணியாக வந்து சோறிட்ட அம்மன் யார்?

திருவொற்றியூர் அம்மன்

8831. சூரியனின் அம்சமாக குந்திக்கு பிறந்த பிள்ளை யார்?

கர்ணன்

8832. குடத்தில் இருந்து பிறந்ததால் அகத்தியரை என்ன என்று அழைப்பர்?

கும்பமுனிவர் (கும்பம் என்றால் குடம்)

8833. பாற்கடலைக் கடைந்த மலையைத் தாங்க விஷ்ணு எடுத்த அவதாரம் என்ன?

கூர்மாவதாரம் (ஆமையாகி மலையைத் தாங்கினார்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812