திங்கள், 19 டிசம்பர், 2011



கே. ஈஸ்வரலிங்கம்,
தலைவர் ஸ்தாபகர்
தமிழர் நற்பணி மன்றம்

(மார்கழி)

8834. மார்கழி மாதத்தில் பெண்கள் நோற்கும் விரதங்களில் முக்கியமானது எது?

மார்கழி நோன்பு

8835. மார்கழி நோன்பு என்று இதற்கு ஏன் பெயர் வந்தது?

மார்கழியில் நோற்பதால்

8836. மார்கழி நோன்புக்கு ‘பாவை நோன்பு’ என்று பெயர் ஏன் வந்தது?

கன்னிப்பெண்களால் நோற்கப்படுவதாலும் பாவை அமைத்து நோற்கப்படுவதாலும் ஆகும்.

8837. திருவெம்பாவை பாடியவர் யார்?

மணிவாசகப் பெருமான்

8838. திருப்பாவை அருளியவர் யார்?

ஆண்டாள்

8839. திருவெம்பாவையும் திருப்பாவையும் எந்த நோன்பை அடிப்படையாகக் கொண்டவை?

மார்கழி நோன்பை

8840. மார்கழி நோன்பை தமிழர்கள் எந்த காலத்திலிருந்து அனுஷ்டித்து வருகின்றனர்?

சங்க காலத்திலிருந்து

8841. மார்கழி நோன்பை பற்றி கூறும் சங்க கால நூல்கள் எவை?

பரிபாடல், நற்றிணை, ஐந்குறுநூறு, கலித்தொகை.

8842. பாவை நோன்பை அனுஷ்டிப்பதால் ஏற்படும் பலன் என்ன?

விரும்பத்தக்க சிறந்த கணவனைப் பெறுவர்.

8843. திருவெம்பாவை நோன்பு எத்தனை நாட்கள் நோற்கப்படும்?

பத்து நாட்கள்

8844. தோழியர் ஒருவரை ஒருவர் துயில் நீங்கி எழுமாறு அழைக்கும் பாடல்கள் எவை?

திருவெம்பாவைப் பாடல்கள்

8845. திருவெம்பாவை காலம் எது?

மார்கழி திருவாதிரை நட்சத்திரத்திற்கு முந்திய ஒன்பது தினங்களும்

8846. ஆடி முதல் மார்கழி வரையுள்ள காலம் யாருக்கு இராக்காலம்?

தேவர்களுக்கு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812