திங்கள், 9 ஜனவரி, 2012
தலைவர் ஸ்தாபகர்
தமிழர் நற்பணி மன்றம்
இசைக்கலை
8870. பரிபாடல் என்பதற்கு இப்பெயர் எப்படி வந்தது?
பரிபாடல் என்னும் ஒருவகைப் பாவினால் இயன்றதால்.
8871. பரிதல் என்பதற்குரிய பொருள் என்ன?
அன்புடன் பேசுதல்.
8872. பாவகையால் பெயர் பெற்ற மற்றொரு நூல் எது?
கலித்தொகை.
8873) பண் தமிழிசைப் பாடல்களில் பெரு விருப்புடையவன் யார்?
சிவபெருமான்
8874) தமிழிசையும் சைவ நெறியும் இணையாக வளரத் தொடங்கியது யாரால்?
திருஞானசம்பந்தர் மூர்த்தி நாயனாரால்
8875) தமிழிசையும் சைவ நெறியும் இணையாக வளரத் தொடங்கியது எப்போது?
சம்பந்தர் ‘தோடுடைய செவியன்’ என்ற தேவாரம் பாடியருளிய போது
8876) தெய்வம் சுட்டிவரும் வாரப் பாடல் என
வழங்கப்பெற்றது எது?
தேவாரம்
8877) தேவாரம் என்பதில் தே+வாரம் என பிரித்தால் ‘தே’ எதை குறிக்கும்?
தேவினிடத்து அன்பை விளைவிப்பதை
8878) தேவாரம் என்பதில் ‘வாரம்’ எதை குறிக்கும்?
அன்பை
8879) தேவாரத்தை வேறு எவ்வாறு வரைவிலக்கணம் செய்து கொள்ளலாம்?
சிவபெருமானுக்கு ஆரம் போல் அழகு செய்வது
8880) தம் பாடலுக்குத் தாமே இசை வகுத்துப் பாடியவர் யார்?
சம்பந்தர்
8881) பெருமானுடன் சேர்ந்து திருப்பதிகம் பாடும் போது அதனை யாழில் அமைத்து வாசிக்கும் திருப்பணியைப் புரிந்து வந்தவர்கள் யார்?
திருநீலகண்ட யாழ்ப்பாணரும் அவரது மனைவியாரும்
8882) திருநீலகண்ட யாழ்ப்பாணரின் மனைவியாரின் பெயர் என்ன?
மதங்க சூளாமணியார்
8883) சம்பந்தர் அருளிய பாடல்களை என்னவென்பர்?
உருக்குவேத சாரம்
8884) ‘நீயா மாநீ யேயாமா தாவேbகா நீதானே நேதா நீகா bவேதா மாயா யேநீ மாயாநீ’ என்பது எத்தனை அடிப் பாடல்?
இரண்டடிப்பாடல்
8885) இந்த இரண்டடிப் பாடலில் உள்ள விசேடம் என்ன?
இதில் உள்ள அத்தனை எழுத்துக்களும் நெட்டெழுத்துக்கள்
8886) செந்தமிழ்ப் பாமாலையின் விகற்பங்களாகிய மொழிமாற்று, மாலை மாற்று, திருவியமகம், ஏகபாதம், இருக்குக் குறள், எழுகூற்றிருக்கை முதலானவற்றை அருளிச் செய்தவர் யார்?
சம்பந்தர்
8887) சம்பந்தர் தமது பாடல்களை என்னவென்று குறிப்பிடுவார்?
இசை மாலை
8888) ‘விலையுடைய அருந்தமிழ் மாலை’ என போற்றப் பெறுவது எந்தத் திருப்பதிகம்?
இடரினும் தளரினும் எனதுறு நோய் என்ற பதிகம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
-
16258) அறநெறிக் கல்வியின் “மகுட வாசகம்” என்ன? “கல்வியின் சிறந்த குறிக்கோள் பண்புடைமையே” 16259) அதன் “இலட்சிய நோக்கு” என்ன? சிறார்களி...
-
நமசிவாய என்பதற்கு என்ன பொருள்? சிவனை வணங்குகிறேன் என்பது பொருள். இறைவனின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக