திங்கள், 23 ஜனவரி, 2012

கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர் ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்

8916) சூரியனின் அதிதேவதையாகத் திகழ்பவர் யார்?

சிவபெருமான்

8917) சூரியனின் மணுவுருவாக கருதப்படுபவர் யார்? சிவபெருமான்

8918) சூரியனின் பெற்றோர் யார்?

கரஸ்பியர்- அதிதி

8919) சூரியன் யாரை மணந்தார்?

சஞ்லிகையை

8920) சஞ்சிகை யாருடைய மகள்?

விஸ்வகர்மாவின் மகள்

8921) சஞ்சிகையின் மக்கள் யார்?

வைபஸ்வதமனு- யமன், யமுனா

8922) சாயாவின் மக்கள் யார்?

சாவர்னிமனு, ச்ருதகர்மா (சனிபகவான்)

8923) சூரியன் ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு பெயர பெறுகிறார். அவை எவை?

மித்ரன், ரவி,சூரியன், பானு, சுகன், பூஷ்ணன்,

ஹிரண்ய, கர்ப்பன், மர்சி, ஆதித்யன், ஸவிதா அரக் கன், பாஸ்கரன்.

8924) கர்ப்பக்கிரகத்தை வலம் வருவது எதற்காக?

கோயிலில் கர்ப்பக்கிரகத்தை வலம் வருவதும் கூட எல் லோரும் செய்கிறார்கள் என்று செய்கிறோம். அந்த நேரத்தில் பேசிக் கொண்டும் வேடிக்கை பார்த்துக் கொண்டும் எந்திரமாய் நடக்கிறோம். அது தவறு. ஒரு வட்டத்தை மையப்புள்ளி இன்றி நாம் வரைய கூடியாது. இறைவன் தான் நம் வாழ்வில் மையம், ஆதாரம் எல்லாம் அந்த இறை மையத்தை ஆதாரமாகக் கொண்டே நாம் இயங்குகின்றோம் என்பதை உணர்த்துவதே இந்த பிரதVணம் என்ற வலம் வருதல். வலம் வருவதும் நாம் இடமிருந்து வலமாகத் தான் செய்கிறோம்.

இப்படி வலம் வருகையில் இறைவன் எப்போதும் நமக்கு வலப்பக்கமாகவே இருக்கிறான்.

நம் நாட்டில் வலப்பக்கத்தை மங்கலமாகக் கருது கிறார்கள். ஆங்கிலத்தில் கூட அது right siனீலீ என்றே அழைக்க ப்படுகிறது. எனவே கர்ப்பக்கிரகத்தை வலம் வருகையில் எல்லாம் வல்ல இறைவன் என்ற மையத்தை வைத்தே நாம் நம் வாழ்வில் இயங்குகிறோம்.

அவனை நம் இதயத்தின் மையத்தில் வைத்தே அனைத்து எண்ணங்களும் எழ வேண்டும் என்ற பாவனையில் சுறி வந்து பாருங்கள். தொழுதுவிட்டு வெளியே வரும்போது உங்களுக்குள் அமைதியும் சக்தியும் அதிகரிக்கக் காண்பீர்கள். புரிந்து செய்யும் போதே இது போன்ற செயல்கள் புனித மாகின்றன. புரியாமல் செய்யும் இவை வெறும் சம்பிர தாயம் மட்டுமே. புரியாமல் எத்தனை முறை செய்தாலும் அவை ஒரு பலனையும் நமக்கு ஏற்படுத்தாது. எனவே புரிந்து, உணர்ந்து, பக்தியுடன் செய்து பலன் காணுங்கள்.

8925) தீபத்தை ஏன் ஏற்றுகிறோம்?

தினசரி வீட்டில் தீபம் ஏற்றுகிறோம். மங்கள சடங்குகள், பொது நிகழ்ச்சிகள் கூட தீபம் ஏற்றிவிட்டுத்தான் தொடங் கப்படுகிறது. அந்த சடங்குகள், நிகழ்ச்சிகள் முடியும் வரை அந்த தீபம் எரிந்துகொண்டி ருக்கும்.

ஒளி அறிவையும், ஞானத்தையும் குறிக்கிறது. இருள் அறியாமையையும், அஞ்ஞானத்தையும் குறிக்கின்றது. இறைவனை எல்லா ஞானத்திற்கும் மூலமானவனாக வும், ஒளிமயமானவனாகவும் கருதுகிறார்கள். நமது குடும்பங்களில் அறியாமை என்ற இருளகற்றி ஞானம் என்ற ஒளி பரவ வேண்டும் என்ற எண்ணத்தில்தான் தீபம் ஏற்றுகிறோம்.

சந்தியா காலங்களான அதிகாலை, மாலை நேரங்கள் பிரார்த்தனைக்கேற்ற காலங்களாக நம் முன்னோர் கருதி வந்ததால் அந்த சமயங்களில் தீபம் ஏற்றி வழிபடுவது நமது வழக்கமாக இருக்கிறது.

எண்ணெய், திரி இரண்டும் ஆன்மீக மார்க்கத்தில் இவ்வுலகத்தில் பற்றை ஏற்படுத்தும் வாசனைகளாகக் கருதுகிறார்கள்.

தீபம் ஒளிரும் போது எண்ணெயும், திரியும் சிறிது சிறிதாக அழிவது போல், ஞானத் தினால் நம் பற்றுகள் எல்லாம் அழிகின்றன என்றும், ஞானம் அவற்றை அழித்த பிறகே ஓய்கிறது என்றும் தீபம் மூலம் உணர்தப்படுவதாக அறிஞர்கள் கருதுகிறார்கள்.

மேலும் தீபத்தின் நெருப்பு மேல் நோக்கியே ஒளிர்கிறது. அது போல உண்மையான ஞானமும் நம்மை மேலான எண்ணங்களுக்கே தூண்டுகிறது. அந்த ஞானம் நமக்கு அமையட்டும், அந்த ஞான ஒளி நம் வாழ்க்கைப் பாதையில் ஒளிவீசி வழிகாட்டும் என்ற பிரார்த்தனையோடு நாம் தீபம் ஏற்றுகிறோம்.

சடங்குகள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் தீபம் ஏற்றி வைப்பதும் அந்த ஞானாக்னியான இறைவன் அங்கு இருந்து அவை சிறப்பாக நடைபெற அருள் புரியட்டும் என்ற எண்ணத்தினால் தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812