திங்கள், 9 ஜனவரி, 2012


கே. ஈஸ்வரலிங்கம்,
தலைவர் ஸ்தாபகர்
தமிழர் நற்பணி மன்றம்

மூன்றின் பெருமை

8889) ஆன்மாக்கள் எத்தனை? அவை எவை?

- மூன்று, விஞ்ஞானகலர், பிரளாயகலர், சகலர்

8890) மூர்த்திகள் எத்தனை பேர்? அவர்கள் யார்?

- பிரம்மா, விஷ்ணு, சிவன்

8891) மன்னர்கள் மூவர் யார்?

- சேரன், சோழன், பாண்டியன்

8892) தேவாரம்பாடிய மூவர்கள் யார்?

- அப்பர், சம்பந்தர், சுந்தரர்

8893) மனிதர்கள் மூவர் யார்?

சத்தமன், மத்திபன், அதிமன்

8894) சத்திகள் மூவர் யார்?

கிரியாசக்தி, ஞானசக்தி, இச்சாசக்தி

8895) ஆசைகள் மூன்றும் எவை?

மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை

8896) கடவுளின் நிலை மூன்றும் எவை?

- அருவம், உருவம், அருவுருவம்

8897) கடவுளின் தன்மை மூன்றும் எவை?

- சத்து, சிந்து, ஆனந்தம்

8998) மதங்கள் மூன்றும் எவை?

- கன்ன மதம், காடமதம், கபோலமதம்

8899) அக்கினி மூன்றும் எவை?

- ஆகவனீயம், காருக பத்தியம் தாட்சணணாயனம்

8800) சுடர்கள் மூன்றும் எவை?

சூரியன், சந்திரன், அக்கினி

8901) இதியாசங்கள் மூன்றும் எவை?

இராமாயணம், மகாபாரதம், சிவரகசியம்

8902) உலகங்கள் மூன்றும் எவை?

பூதலம், மீதலம், பாதிலம்

8903) குணங்கள் மூன்றும் எவை?

சத்துவம், ராஜகம், தாமசம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812