செவ்வாய், 29 ஜனவரி, 2013
9745) திதியன்றும் அமாவாசை நாளிலும் வாசலில் கோலமிடலாமா?
கூடாது
9746) பிதுர்க்கடன் நாளன்று வாசலில் கோலமிடக் கூடாது என்பது ஏன்?
முன்னோர் வழிபாட்டில் முழுமையாக ஈடுபட வேண்டும் என்ற நோக்கத்திலாகும்.
9747) முன்னோரது ஆசி பெற உகந்த நாட்கள் எவை?
அமாவாசை, வருஷ திதி, மகாளயபட்ச நாட்கள்
9748) சனீஸ்வரருக்குரிய வாகனம் எது?
காகம்
9749) எமலோகத்தின் வாசலில் எது இருப்பதாக கூறப்படுகிறது?
காகம்
9750) எமனின் தூதுவன் என்று எதனை சொல்வார்கள்?
காகத்தை
9751) காகத்திற்கு சாதம் வைப்பது எதற்காக?
எமலோகத்தில் வாழும் நம் முன்னோர் அமைதி பெற்று நமக்கு ஆசியளிப்பர் என்ற நம்பிக்கையில் ஆகும்.
9752) நாம் வைத்த உணவை காகம் தீண்டா விட்டால் என்னவென்று நினைப்பார்கள்?
இறந்துபோன நம் முன்னோருக்கு ஏதோ குறை இருப்பதாக கருதுவார்கள்.
9753) வானவியல் கணிப்பின் படி சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் கூடுகின்ற போதுள்ள காலம் எது?
அமாவாசை
9754) காலையில் கோவில் திறந்த உடனேயே சென்று சாமி கும்பிடலாமா?
கூடாது
9755) எப்போது கும்பிட வேண்டும்?
சிவாச்சாரியார் முதலில் தீபம் ஏற்றி ஆராதனை காட்டிய பிறகே நாம் சென்று தரிசிக்க வேண்டும்.
9756) திரை போடப்பட்ட நேரங்களிலும் சன்னதியில் தீபம் இல்லாத போதும் சாமி தரிசனம் செய்யலாமா?
கூடாது
9757) கோவிலுக்குச் சென்று விட்டு வீடு திரும்பி வந்ததும் உடனே கால்களை கழுவலாமா?
கூடாது
9758) எப்போது காலை கழுவலாம்?
சிறிது நேரம் கழித்த பின்னரே காலைக் கழுவ வேண்டும்.
9759) மந்திரம் என்பது என்ன?
மனதின் திரம் மந்திரம் எனப்படும்.
இவை அர்த்தமுள்ள அல்லது அர்த்தமற்ற வார்த்தைகளின் தொகுப்பாகும்.
இவை ஒவ்வொன்றும் ஒரு கடவுளிடமோ அல்லது தேவதையிடமோ தொடர்பு கொண்டது. மனிதனுக்கு உள்ள ஆறாம் அறிவைக் கொண்டு அடுத்த நிலையை அறிந்து உணர்வதில் - ஒரு சீரான சப்த அதிர்வுகளுக்கு பெரும் பங்கு உண்டு. இவை தேவதை வசிய சக்தியை உடையவை.
9760) மந்திரங்கள் எவ்வாறு பெறப்பட்டன?
வேத சாத்திரங்களிடமிருந்தும், முனிவர்கள், மகான்கள் மற்றும் சாதுக்களிடமிருந்தும் பெறப்பட்டவை.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
-
16258) அறநெறிக் கல்வியின் “மகுட வாசகம்” என்ன? “கல்வியின் சிறந்த குறிக்கோள் பண்புடைமையே” 16259) அதன் “இலட்சிய நோக்கு” என்ன? சிறார்களி...
-
நமசிவாய என்பதற்கு என்ன பொருள்? சிவனை வணங்குகிறேன் என்பது பொருள். இறைவனின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக