வியாழன், 24 ஜனவரி, 2013
(சங்கு)
கே. ஈஸ்வரலிங்கம்
9719) பிறப்பு, இறப்பு என அனைத்திலும் முக்கிய இடத்தை பெறுவது எது?
சங்கு
9720) சங்கின் ஒலியில் ஏற்படும் நன்மை என்ன?
தீய சக்திகள் நீங்கி நல்ல சக்திகள் உருவாகிறது.
9721) ஆலயங்களில் எப்போது சங்கு முழங்கும்?
பூஜைகள் ஆரம்பிக்கப்படும் போது
9722) பழங்காலங்களில் எப்போது சங்கு முழங்கும்?
அரண்மனைகளில் அரச விழாக்கள் ஆரம்பிக்கும் முன்பும் போருக்கு தயாராகும் போதும்.
9723) இவ்வாறு ஓசை தரும் சங்கு பாசம் தரும் சங்காக பயன்பட்டது எவ்வாறு?
குழந்தைகளுக்கு பால் பருக்குவதற்கு பயன்படுத்தும் போது
9724) சங்கு எந்த தெய்வத்துக்கு ஒப்பானது?
மகாலட்சுமிக்கு
9725) சங்கு எங்கெல்லாம் உள்ளதோ அங்கு யார் வசிப்பதாக ஐதீகம்?
லட்சுமி
9726) ஆலயங்களில் பிரதான சங்காக இடம்பெறுவது எது?
வலம்புரிச் சங்கு
9727) சங்கின் அமைப்பு எதை உணர்த்துகிறது?
அந்தப் பிரணவத்தை
9728) கணபதியின் தும்பிக்கையைப் போல தோற்றம் பெற்றது எது?
வலம்புரி
9729) பாற் கடலைக் கடைந்த போது கிடைத்த மங்கலப் பொருட்களில் ஒன்று எது?
சங்கு
9730) இந்த சங்கு உதயமானதும் அதனை தன் கரத்தில் வைத்துக் கொண்டவர் யார்?
மஹா விஷ்ணு
9731) மஹா விஷ்ணு இந்த சங்கை வைத்துக் கொண்டதும் என்னவானார்?
சங்கு சக்ரதாரி ஆனார்.
9732) சங்கு எவற்றை பிரதிபலிக்கும்?
ஐஸ்வர்யம், வீரம், மங்கலம்
9733) வலம்புரிச் சங்கில் எந்தெந்த தெய்வங்கள் வாசம் செய்கின்றன?
லட்சுமி, குபேரன்
9734) வலம்புரிச் சங்கை வைத்து பூஜை செய்வதால் ஏற்படும் நன்மைகள் என்ன?
சுபீட்சம் பெருகும், வியாதிகள் நீங்கும்
9735) ஒரு வலம்புரி சங்கு எத்தனை இடம்புரி சங்குகளுக்கு சமம்?
கோடி
9736) கோடி வலம்புரி சங்குகளுக்கு சமமான சங்கை வேறு எவ்வாறு அழைப்பர்?
கோமடி சங்கு
9737) எந்த சங்கினால் அபிஷேகம் செய்வது விசேஷம்?
கோமடி சங்கினால்
9738) அம்பிகையின் வடிவமாக கருதப்படுவது எது?
பசு
9739) கோமடி சங்கில் அபிஷேகம் செய்வதை என்ன வென்று சொல்வார்கள்?
அம்பிகையின் வடிவமான பசுவின் மடியில் இருந்து நேரடியாக சிவனுக்கு அபிஷேகம் செய்யப்படுவது என்பர்.
9740) சிவபெருமான் அக்னி பிழம்பாக காட்சி தருவது எந்த மாதத்தில்?
கார்த்திகையில்
9741) கார்த்திகை மாதத்தில் எப்போது அக்னி பிழம்பாக காட்சி தருவார்?
பெளர்ணமியுடன் கிருத்திகை நட்சத்திரம் கூடும் நேரத்தில்.
9742) கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமைகளில் வருவது என்ன?
சோமவாரம்
9743) அன்று சிவன் கோவில்களில் என்ன செய்யப்படும்?
சங்காபிஷேகம்
9744) சங்காபிஷேகம் நடத்தப்படுவது ஏன்? இறைவனை குளிர்விக்க.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
-
16258) அறநெறிக் கல்வியின் “மகுட வாசகம்” என்ன? “கல்வியின் சிறந்த குறிக்கோள் பண்புடைமையே” 16259) அதன் “இலட்சிய நோக்கு” என்ன? சிறார்களி...
-
நமசிவாய என்பதற்கு என்ன பொருள்? சிவனை வணங்குகிறேன் என்பது பொருள். இறைவனின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக