செவ்வாய், 15 ஜனவரி, 2013
கும்பாபிஷேகம்
கே. ஈஸ்வரலிங்கம்
9701) கும்பத்தை எத்தனை இழை நூலால் சுற்றி இருப்பார்கள்?
மூன்று
9702) அந்த மூன்று இழை நூலும் எதை குறிக்கிறது?
சரஸ்வதி, லக்ஷ்மி, பார்வதி தேவியை
9703) யாகசாலையின் முக்கியமான சடங்கு என்ன?
புனிதமான நீரை சேகரித்து கும்பத்தில்
நிறைத்து பூஜிப்பதே.
9704) கும்பத்தின் கீழ் என்ன பரப்பி போடப்பட்டிருக்கும்?
தானியங்கள்
9705) அரிசியின் மேல் உள்ள கும்பத்தில் இருப்பது யார்?
முருகன்
9706) ரிஷபதேவர் எந்த தானியத்தின் மேல் இருப்பார்?
நெல்லில்
9707) அக்னிதேவர் எந்த தானியத்தின் மேல் இருப்பார்?
உளுந்தில்
9708) கோதுமையில் இருப்பது யார்?
சந்திரன்
9709) துவரையில் இருப்பது யார்?
குபேரன்
9710) வருணன் இருப்பது எதன் மேல்?
பயறு
9711) எள்ளில் இருப்பது யார்?
தேவி
9712) அபிஷேகம் செய்வதற்கு முன் என்ன செய்வார்கள்?
தர்ப்பையின் உதவியால் கும்பத்துக்கும் பகவானுடைய மூர்த்திக்கும் தொடர்பு செய்யச் செய்வது
9713) இந்த முக்கிய நிகழ்ச்சியை என்னவென்று கூறுவார்கள்?
நாடி சந்தனம்
9714) கலசங்கள் எவற்றில் காணப்படும்?
ராஜகோபுரம், விமானம்
9715) மகா கும்பாபிஷேகம் என்பது என்ன?
ராஜகோபுரம், விமானம் இவற்றில் உள்ள கலசங்களில் அபிஷேகம் செய்வதே மகா கும்பாபிஷேகமாகும்.
9716) கும்பாபிஷேகம் ஆனபின் எத்தனை நாட்களுக்கு சிறப்பான வழிபாடுகள் நடத்தப்படும்?
நாற்பது நாட்களுக்கு
9717) இதனை என்னவென்று சொல்லுவார்கள்?
மண்டலாபிஷேகம்
9718) யாகம் முடிந்த அன்று என்ன செய்வார்கள்?
யாத்ரா தானம்,
கல சோத்தாபனம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
-
16258) அறநெறிக் கல்வியின் “மகுட வாசகம்” என்ன? “கல்வியின் சிறந்த குறிக்கோள் பண்புடைமையே” 16259) அதன் “இலட்சிய நோக்கு” என்ன? சிறார்களி...
-
நமசிவாய என்பதற்கு என்ன பொருள்? சிவனை வணங்குகிறேன் என்பது பொருள். இறைவனின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக