திங்கள், 7 ஜனவரி, 2013

கும்பாபிஷேகம்

கே. ஈஸ்வரலிங்கம் 9686. அக்கினி கலசத்துக்கு வடக்கு பாகத்தில் என்ன கலசங்கள் வைக்க வேண்டும்? சிவ, சூரியன் 9687. கிழக்கு பாகத்தில் என்ன கலசம் வைக்க வேண்டும். வாஸ்துரபன் 9688. வாயு கலசத்திற்கு தெற்கில் என்ன கலசம் வைக்க வேண்டும்? மகாலக்ஷ்மி கலசம் 9689. வாயு கலசத்திற்கு கிழக்கு பாகத்தில் என்ன கலசம் வைக்க வேண்டும்? விக்ன விநாயக கலசம் 9690. மேற்கு பாகத்தில் என்ன கலசம் வைக்க வேண்டும்? ஸப்த குருமூர்த்தி 9691. மொத்தமாக எத்தனை பரிவாரங்கள் இருக்கும்? இருபத்தேழு 9692. மேற்கூறிய கலசங்களை விட வேறு கலசங்கள் இருக்கும்? யாகேஸ்வரர், அஸ்திரவர்த்தினி, என்ற இரு கலசங்களும் பிரதானமான மூர்த்தியின் கலசமும் இருக்கும். 9693. மிகவும் முக்கியமான கலசம் எது? பீட சக்தியின் கலசம் 9694. அஷ்ட மூர்த்திகளுக்கு எத்தனை கலசங்கள் வைக்கப்படும்? எட்டு 9695. அந்த எட்டு கலசங்களுக்கும் உரிய மூர்த்திகள் யார்? அனந்தன், சூக்ஷ்மன், சிவோத்தமன், ஏகநேத்ரன், ஏகருத்ரன், த்ரிமூர்த்தி, ஸ்ரீகண்டன சிகண்டி 9696. அஷ்ட பந்தன கும்பாபிஷேகம் என்றால் என்ன? சுவாமி விக்ரகம் வைத்த இடத்தில் அசையாமல் இருக்க பீடத்தின் அடியில் சாத்தும் பொருட்கள் ஆகும். 9697. பீடத்தின் அடியில் சாத்தப்படும் பொருள்கள் எவை? கல் (காவிப்பொடி) சுக்கான் பொடி, குங்கிலியம், செம்பஞ்சு, கொம்பரக்கு ஜாதிலிங்கம், வெள்ளை மெருகு எருமை வெண்ணெய் 9698. கும்பாபிஷேகத்தின் போது எவற்றுக்கெல்லாம் அபிஷேகம் செய்வார்கள்? கர்ப்பகிரஹத்துக்கு மேலே உள்ள தாமிர கலசத்திற்கும் வெளியே ராஜ கோபுரம் போன்ற கலசகங்களும் 9699. இந்த கலசங்களுக்குள் என்ன இருக்கும்? நெல், கேழ்வரகு போன்ற தானியம் நிரப்பிவைக்கப்பட்டு இருக்கும் 9700. கோபுரத்தின் மேல் இருக்கும் கலசத்தில் கேழ்வரகு, நெல் போன்ற தானியம் வைத்திருப்பதர்குரிய காரணம் என்ன? இடியை தாங்கும் சக்தி உடையது என்பதால் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812