வெள்ளி, 27 ஜூலை, 2018

மனைவி போன பின்......



கணவன் இறந்த பின் பெண்கள் எப்படியோ, தங்களது பிள்ளைகளை அனுசரித்து வாழ்ந்து விடுகின்றனர்.
ஆனால் மனைவி போன பின் கணவன் படும் துயர் இருக்கிறதே... கொடுமை !!


தானாகவே தேநீர்  கூட போடத் தெரியாத கணவன், தண்ணீரைக் கூடத் தானே மொண்டு குடிக்காத கணவன்,மனைவியின் மறைவுக்குப் பின் ஏனென்று கேட்க ஆளில்லாமல் போகிறான்.
ஒரு ஆணுக்கு நன்றாகவே சமைக்கத் தெரிந்தாலும் கூட மருமகளோ , மகளோ சமைலறையில் ஆளும் போது அங்கே இந்த ஆணால் தன்னிச்சையாக நுழைய முடியாத நிலை.
வேண்டுவனவற்றை தானே சமைத்துக் கொள்ளவோ எடுத்துக் கொள்ளவோ கூச்சப்படும் மனம்.
என்ன கொடுக்கிறார்களோ, எப்போது கொடுக்கிறார்களோ கொடுத்ததை கொடுத்தபோது சாப்பிட்டுக் கொள்ளணும்.
இரண்டாவது தேநீர்  கூட கேட்க முடியாது.
தலைவலியில் ஆரம்பித்து எப்பேரப்பட்ட சுகக்கேடு வந்தாலும் ஆதரவாகப் பேசக் கூட ஆளிருக்காது.
A testimony by a wife who had won best couple award :
என் கணவர் காலை எட்டரை மணிப் போல சும்மா கிச்சனில் வந்து ஏதானும் பேச ஆரம்பித்தால் தேநீர் வேணும்னு அர்த்தம்.
இரண்டாவது தேநீர் கேட்டால் காலை உணவின் அளவு அவருக்குக் குறைவதால் கேட்கிறாரோ என்று யோசிப்பேன்.
இப்போதெல்லாம் காலையில் என் கணவர் கேட்காமலேயே இரண்டாவது தேநீர் கொடுத்துடுவேன்.
எனக்குப் பின் அவருக்கு யார் கொடுப்பாங்க ???? இந்த நினைவு வந்தால் மனசு ரொம்ப பாரமாகிடுது.
மனைவி இல்லாத கணவன் உயிரற்ற உடல் போலே !!
சகோதரிகளே !! யாருக்கு விதி எப்போன்னு தெரியாது !
உங்கள் கணவர் உங்களுக்குப் பின் வாயில்லாப் பூச்சி !
முடிந்தவரை கணவனிடம் அனுசரணையாக இருங்கள் !t

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812