வெள்ளி, 25 ஜனவரி, 2019

41 நாட்கள் விரதம்

41 நாட்கள் விரதம் மண்டலமாக
மாற்றம் பெற்றது ஏன்?


சபரிமலையில் இருக்கும் ஐயப்பனை 41 நாட்கள் விரதம் இருந்து வழிபட வேண்டும் என்பது ஒரு நடைமுறையாகும். அதுவே ஒரு மண்டலமாக 48 நாட்களாக மாற்றம் பெற்றது ஏன் என்று பார்க்கலாம்.

சபரிமலையில் இருக்கும் ஐயப்பனை 41 நாட்கள் விரதம் இருந்து வழிபட வேண்டும் என்பது ஒரு நடைமுறையாகும். மணிகண்டனைத் தீய எண்ணத்துடன் புலிப்பால் கொண்டு வரும்படி காட்டுக்கு அனுப்பிய ராணியும் அவருக்குத் துணை போன மந்திரியும் 41 நாட்கள் பெரும் துன்பமடைந்தனர்.

அந்த நாட்களில் அவர்கள் விரும்பிய எதையும் சாப்பிட முடியாமல் உடலையும் வருத்திக் கொள்ள நேரிட்டது. அவர்களது தீய எண்ணத்துக்குத் தண்டனையாகவே அந்த 41 நாட்கள் அமைந்தன.

கடைசியில் காட்டிற்குள் சென்று திரும்பி வந்த ஐயப்பனிடம் அவர்கள் மன்னிப்பு வேண்டிச் சரணடைந்தனர். அவர்கள் இருவரும் 41 நாட்கள் துன்புற்றிருந்ததை நினைவுபடுத்தும் வகையிலேயே ஐயப்ப பக்தர்கள் 41 நாட்களுக்கான விரதம் இருக்கும் நடைமுறை ஏற்பட்டது.

பின்னர் அதுவே ஒரு மண்டலமாக 48 நாட்களாக மாற்றம் பெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812