வெள்ளி, 25 ஜனவரி, 2019

கணபதி ஹோமம்


1) வீட்டில் கணபதி ஹோமத்தை நடத்துவதாக இருந்தால் எப்போது செய்வது நல்லது ?
பிரம்ம முகூர்த்தத்தில் நடத்துவது நல்லது


) பிரம்ம முகூர்த்தம் எத்தனை மணியிலிருந்து எத்தனை மணி வரை? அதிகாலை 4.30 முதல் 6 மணி



) வீட்டில் கணபதி ஹோமத்தை நாளில் நடத்துவது நல்லது ?
விநாயகருக்குரிய சதுர்த்தி திதி, அஸ்தம் நட்சத்திர நாளில் நடத்துவது சிறப்பு.


) பசு எந்த தெய்வத்தின் அம்சம்? லட்சுமியின்


) பசு எந்த தேவதையின் அடையாளம்? தர்ம தேவதையின்


) கிரகப்பிரவேசத்தின் போது முதலில் பசுமாட்டை வீட்டிற்கு அழைத்து வருவது ஏன்?
வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைக்கவும் தர்மம் தழைக்கவும் பசுவை வீட்டுக்குள் அழைத்துச் செல்கிறார்கள்.


) மற்றவர் ஏற்றிய அகல் விளக்குகளில் நாம் தீபம் ஏற்றலாமா?
யார் ஏற்றினாலும் தீபம் ஒன்று தான். சுவாமி சந்நிதியில் தீபம் ஏற்றினால் நாம் செய்த பாவங்கள் நீங்கி புண்ணியம் கிடைக்கிறது. இது விளக்கேற்றினால் கிடைக்கும் பலன் தானே தவிர எரிகிற விளக்கில் ஒன்றுமில்லை. ஒருவர்
ஏற்றிய விளக்கில் நாம் மீண்டும் விளக்கேற்றினால் அவரது பாவம் நமக்கு வந்துவிடாது. நமது புண்ணியமும் அவருக்குப் போய் விடாது. சந்நிதியில் விளக்கேற்றுகிறோம் என்ற தூய சிந்தனையுடன் மட்டும் தீபம் ஏற்றுங்கள்.



) மதுரையில் உள்ள சிவாலயத்தை மீனாட்சி அம்மன் கோயில் என்று குறிப்பிடுகிறோம். சுவாமி பெயரால் வழங்கப்படாதது ஏன்?
திருமணம் செய்து கொண்டு கணவன் வீட்டிற்குச் சென்றிருக்கும் நம் பெண்ணைப் பார்க்கச் செல்கிறோம். அப்பொழுது "என் பெண் வீட்டிற்குச் செல்கிறேன்'' என்று தான் கூறுவோமே தவிர, "மாப்பிள்ளை வீட்டிற்கு செல்கிறேன்'' என்று கூறுவதில்லையே!



மதுரையை ஆண்ட மலையத்வஜ பாண்டியனுக்கு மகளாக அவதரித்து மதுரையின் அரசியாக மகுடம் சூடி திக்விஜயமாக கைலாயத்துக்கே சென்றவள் மீனாட்சி. அந்த வீரத்திருமகளை திருமணம் செய்தவர் சிவன். எனவே அம்பாளுக்கு இங்கே முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது.


) பிரதோஷம் என்பது என்ன மொழி சொல்? வடமொழி



) பிரதோஷம் என்ற சொல்லின் வடமொழி இலக்கணம் என்ன?

"ப்ரளீயந்தே அஸ்வின் தோஷா'' என்பது ஆகும்.


5) பிரதோஷம் என்பதன் பொருள் என்ன?
அதாவது அனைத்து தோஷங்களும் ஒடுங்கும் காலம் என்று பொருள்.


பகல் முழுவதும் மனிதர்கள் எவ்வளவோ செயல்களைச் செய்கிறார்கள். அவற்றில் நல்லவை, கெட்டவை கலந்தே இருக்கின்றன. அறியாமல் செய்த தீமைகளைப் பொறுத்துக் கொள்ளுதலும், நல்ல செயல்களுக்கு இறைவன் அருள் செய்தலும் இந்த பிரதோஷ காலத்தில் தான்.



) பிரதோஷத்தின் சரியான கால அளவு எவ்வளவு?
தினமும் மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான ஒன்றரை மணி நேரம் பிரதோஷ காலமாகும்.



) இந்த நேரத்தில் யாரை தரிசிப்பது மிக விசேஷமானது?
சிவபெருமானை



) இந்த பிரதோஷத்திற்குாிய பெயர் என்ன? நித்யபிரதோஷம்



) வளர்பிறை திரயோதசிக்கு உாிய பெயர் என்ன? பக்ஷ பிரதோஷம்


) தேய்பிறை திரயோதசிக்கு உாிய பெயர் என்ன?
மாத பிரதோஷம்


) தேய்பிறை திரயோதசி சனிக்கிழமை ஆகியவை கூடியிருந்தால் உாிய பெயர் என்ன?
மகாபிரதோஷம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812