வெள்ளி, 25 ஜனவரி, 2019

மாசிமகம்



உமா தேவியார் அவதரித்தது எப்பொழுது?
மாசி மாதம் மக நட்சத்திரத்தில்
மாசி மகத்தன்று உமா தேவியார் யாருடைய மகளாக அவதரித்தார்?
தட்சணின் மகள் தாட்சாயணியாக அவதரித்தார்

பாதாளத்தில் இருந்த பூமியை பெருமாள் வராக அவதாரம் எடுத்து வெளிகொணர்ந்தது எப்பொழுது?
மாசி மகத்தன்றுதான்.

அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பன் என்று அழைப்பது யாரை?
முருகனை

முருகனை இவ்வாறு அழைக்க காரணம் என்ன?
தந்தைக்கு முருகன் மந்திர உபதேசம் செய்த நாள் என்பதாலாகும்.
தந்தைக்கு முருகன் மந்திர உபதேசம் செய்தது எப்பொழுது?
மாசி மகம்த்தன்றுதான்

மாசி மகத்தை வேறு எவ்வாறு அழைப்பார்கள்?
‘கடலாடும் நாள்‘
கடலாடும் நாளை வேறு எவ்வாறு அழைப்பார்கள்?
‘தீர்த்தமாடும் நாள்‘

மாசி மகம் எப்போது வரும்?
வருடம்தோறும் வரும்

மகா மகம் எப்போது வரும்? 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை

மகம் என்றவுடன் அதன் சிறப்பை சொல்கிறவர்கள் என்ன சொல்லுவார்கள்?
'மகத்தில் பிறந்தவர்கள் ஜெகத்தை ஆள்வார்கள்' என்பதுதான்.

மக நட்சத்திரத்தை வேறு எவ்வாறு அழைப்பார்கள்?
'பித்ருதேவதா நட்சத்திரம்' என்று

முன்னோர்களுக்கு ஆத்ம சாந்தியை தருவது யார்?
பித்ருதேவதாதான்

முன்னோர்கள் ஆத்மசாந்தியுடன் இருந்தால்தான் அவர்களுடைய வம்சம் எப்படி இருக்கும்?
சுபிக்ஷமாக இருக்கும்

வீட்டில் சுபநிகழ்ச்சி நடந்தாலும் பித்ருக்களை வணங்கினால் என்ன நடக்கும்? அந்த சுபநிகழ்ச்சி தடையில்லாமல் நடக்கும்.
பித்ருதேவனின் ஆசியும் கிடைக்கும்.

​​ மாசிமக தினத்தன்று புனித நதிகளில் நீராடுவதை சாஸ்திரம் என்னவென்று சொல்லுகிறது?
'பிதுர் மஹா ஸ்நானம்' என்கிறது.

மாசி பௌர்ணமியுடன் கூடிய மாசி மகத்தன்று சூரியன்
கும்ப ராசியில் இருக்கும் போது சந்திரன் எந்த ராசியில் சஞ்சாரம் செய்வார்?
சிம்ம ராசியில்

மாசி மகம் ந்தெந்த தெய்வங்களுக்கும் உகந்த நாள்?
மகாவிஷ்ணு, உமாமகேஸ்வரன், முருகன்.

தமிழர் நற்பணி மன்றம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812