வெள்ளி, 25 ஜனவரி, 2019

கோலத்தில் பூசணிப் பூ வைப்பதற்கு காரணம் என்ன?

மார்கழி மாதத்தில் வீட்டின் வாயிலில் போடப்படும் கோலத்தில் பூசணிப் பூ வைப்பதற்கு காரணம் என்ன?

அந்த காலத்தில் திருமணத் தரகர்களோ, மாப்பிள்ளை - பெண் தேவை என்பதற்காக வெளியிடப்படும் கல்யாண விளம்பரங்களோ கிடையாது. எந்த வீட்டில் பெண் அல்லது பிள்ளை திருமணத்துக்குத் தயாராக இருக்கிறார்களோ அந்த வீட்டின் வாயிலில் மட்டும் கோலத்தின் மேல் பூசணிப் பூ வைப்பார்கள்.


காலை எழுந்தவுடன் எவற்றை பார்க்கவேண்டும்? 
 தனது உள்ளங்கைகள், பசு, கோவில் கோபுரம், இறைவனின் திருவுருவப் படம்


வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு என்ன வழங்க வேண்டும்?
குங்குமமும் தண்ணீரும்
அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் ஏற்படும் நன்மை என்ன?
பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும் பொருளும் சந்தோஷமும் பெருகும்.

எந்தப் பொருளையும் இல்லை, இல்லை எனக் கூறலாமா? கூறக்கூடாது.
அப்படி என்றால் எப்படி சொல்ல வேண்டும்?
இந்தப் பொருள் வாங்க வேண்டியதிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
எவைகளைக் கையால் பரிமாறக்கூடாது?
அன்னம், உப்பு, நெய்
இவைகளை எப்படி பரிமாறவேண்டும்?
கரண்டியால் மட்டுமே பரிமாறவேண்டும்.

அமாவாசையன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாமா? கூடாது.
இரவில் வீட்டைப் பெருக்கினால் குப்பையை வெளியே கொட்டலாமா?
கூடாது.
பணம், நாணயம் உள்ளிட்டவைகளை கண்ட கண்ட இடத்தில் வைக்கலாமா?
கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812