வெள்ளி, 25 ஜனவரி, 2019

கோலம்


) கோலமிடும் வீட்டில் யார் நிரந்தர வாசம் செய்கின்றாள்?
மகாலெஷ்மி
)எப்போது வாசலில் கோலமிட வேண்டும்?
சூரிய உதயத்திற்கு முன். வீட்டில் இருந்து யாரேனும் வெளியே கிளம்பும் முன்பாக கோலமிட வேண்டும்.

)கோலத்தில் புள்ளி, கோடு போன்றவை போடும் போது சிறு தவறு ஏற்பட்டால் காலினால் அழிக்கலாமா?
கூடாது. கையால் அழிக்க வேண்டும்.

)அதிகாலையில் அரிசி மாவினால் கோலமிடுவதால் ஏற்படும் நன்மை என்ன?
எறும்பு போன்ற சிறு உயிரிகளின் பசியைப் போக்கிய புண்ணியம் கிடைக்கும்.

)தாலி கட்டி முடிந்ததும் மணமேடையை மூன்று முறை வலம் வரச் சொல்வது வழக்கம். இது ஏன்?
ஆலயத்தை வலம் வருவது போல மணப்பந்தலை வலம்வர காரணம் மணப்பந்தலில் அமைக்கப்பட்டிருக்கும் பொருட்கள் யாவும் தெய்வ வடிவங்களாகும்.

)பந்தலில் ஊன்றப்பட்டிருக்கும் நான்கு கால்களும் எவற்றைக் குறிக்கின்றன? நான்கு வேதங்களை

)திருமணம் யார் யார் சாட்சியாக நடைபெறுகிறது?
விக்னேஷ்வரர் சாட்சியாகவும் அக்னிசாட்சியாகவும்

) அரசன் ஆணைக்கால் என்று எது வைக்கப்படுகிறது? அரசானிக்கால் வைக்கப்படுகிறது.

)யாருக்குரிய நவதானியம் வைக்கப்பட்டுள்ளது? குபேரனுக்குரிய

) அதிகாலையில் எழுவதால் கிடைக்கும் சக்திகள் என்னென்ன?
வைகறைப் பொழுதில் சூரியனிடம் இருந்து பூமியை வந்தடையும் ஒளிக்கதிர்கள் சக்தி வாய்ந்தவை. இவை நம் உடலில் படும்போது நரம்புகளுக்கு புதுத்தெம்பையும் உற்சாகத்தையும் கொடுக்கின்றன. கண்கள் ஆரோக்கியத்தையும் உடல் வலிமையையும் பெறுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812