புதன், 10 ஏப்ரல், 2019

விகாரி தமிழ் வருடப்பிறப்பு



புத்தாண்டுக்கு முதல் நாளில் வீடு வாசலை சுத்தம் செய்வதிலும் அலங்கரிப்பதிலும் தமிழர் செலவழிப்பர். மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள், வெற்றிலை, பாக்கு, நகைகள், நெல் முதலான மங்கலப்பொருட்கள் வைத்த தட்டை வழிபாட்டறையில் வைத்து, அதை புத்தாண்டு அதிகாலையில் காண்பது புனிதமாகக் கருதப்படுகின்றது. புத்தாண்டன்று அதிகாலையில் நீராடி கோலமிட்டு, புத்தாடை அணிந்து கோயிலுக்குச் சென்று வழிபடுவர். மாலை வேளையில் உறவினர் வீடுகளுக்குச் செல்வதும், பலகாரங்களை பகிர்ந்துண்பதும் நிகழும்.
வாழ்க்கை என்றாலே கசப்பும் இனிப்பும் கலந்தது தான். இப்புத்தாண்டிலும் கசப்பும் இனிப்பும் இருக்கும் என்பதன் அடையாளமாக வேப்பம்பூப்பச்சடி, மாங்காய்ப்பச்சடி என்பவற்றை உண்பது குறிப்பிடத்தக்க மரபாகும். இலங்கையில் புத்தாண்டு பிறக்கும் விசூ புண்ணியக் காலத்தில் ஆலயத்தில் வழங்கப்படும்
மருத்து நீர் எனப்படும் மூலிகைக் கலவையை இளையவர்களின் தலையில் மூத்தோர் வைத்து ஆசீர்வதிப்பர். அதன்பின்னர் நீராடி அவர்களிடம் ஆசி பெற்று, குறித்த சுபவேளைகளில்
கைவிசேடம் பெறுவர். மூத்தவர்களால் இளையவர்களுக்கு, புத்தாண்டு அன்பளிப்பாக வழங்கப்படும் பணமே கைவிசேடம் எனப்படுகிறது.


புதிய விகாரி தமிழ் வருடப்பிறப்பு வாக்கியப் பஞ்சாங்கப்படி எதிர்வரும் 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிப 1.12மணிக்கு உதயமாகிறது.



ஞாயிறு மு.ப.9.12 மணி முதல் பிப 5.12 மணி வரை விஷூ புண்ணியகாலமாகும். இக்காலப்பகுதியில் சிரசில் ஆலிலையும் காலில் இலவமிலையும் வைத்து மருத்துநீர் தேய்த்து ஸ்ஞானம்செய்து வழிபாடியற்ற வேண்டும்.



வெள்ளை நிறப்பட்டாடை அல்லது வெள்ளை சிவப்புக்கரை அமைந்த பட்டாடை இவ்வருடத்துக்கான ஆடையாகும்.



திருக்கணித பஞ்சாங்கம்

திருக்கணிதபஞ்சாங்கத்தின்படி புதுவருடம் 14ஆம் திகதி பிப 2.09 மணிக்குப்பிறக்கிறது.

ஞாயிறு மு.ப.9.12மணிமுதல் பிப 5.12மணிவரை விஷூ புண்ணியகாலமாகும்.

இக்காலப்பகுதியில் சிரசில் இலவமிலையும் காலில் விளாஇலையும் வைத்து மருத்துநீர் தேய்த்து ஸ்ஞானம் செய்து வழிபாடியற்றவேண்டும்.
வெள்ளை சிவப்புக்கரை அமைந்த பட்டாடை இவ்வருடத்துக்கான ஆடையாகும்.



கைவிசேசம் விஷூபுண்ணிய காலத்திலும் செய்யலாம். ஞாயிறு இரவு 10.31முதல் 11.15வரையுமான காலப்பகுதியிலும் செய்யலாம். அல்லது 17ஆம்திகதி புதன் பகல் 10.16முதல் 11.51வரையும் 18ஆம் திகதி பகல் 9.47முதல் 11.46வரையான் காலப்பகுதியிலும் செய்யலாம்.

மிதுனம், கன்னி, மகரம், கும்பம் ராசிக்காரர்களுக்கு லாபமான வருடம். மேடம் விருச்சிகம் இடபம் துலாம் கர்க்கடகம் ராசிக்கரர்களுக்கு சமசுகமும் சிம்மம், தனு, மீனம் ராசிக்காரர்களுக்கு நஷ்டமும் ஏற்படும் வருடம்.


புது வருச பலனாக நற்பலன்கள் நான்கும் தீயபலன்கள் மூன்றும் காட்டப்படுகின்றது என கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812