புதன், 10 ஏப்ரல், 2019

அறநெறி அறிவு நொடி

இறைவழிபாட்டில் மணியடிப்பதன் காரணம் என்ன?
ஓங்கார நாதத்தையே மணி ஒலிக்கிறது. ஓம் எனும் பிரணவ மந்திரம் சொல்லியே இறைவனை வழிபடுகிறோம். இறைவழிபாடு நடைபெறுகிறது என்பதை குறிக்கவும், பக்தர்கள் அமைதியுடன் இறைதரிசனம் செய்யவேண்டும் என்பதை அறிவிக்கவும் மணியோசை எழுப்பப்படுகிறது. மணியின் அதிர்வலைகள் தீய சக்திகளை விரட்டுகிறது என்றும் கூறுவர்.

மந்திரம் என்பதில் ‘மன்’ என்றால் என்ன?
மனம்.
‘திரா’ என்றால் என்ன?
“விடுவிப்பது”.
மந்திரம் என்றால் என்ன?
மனதை விடுவிப்பது என்று பொருள். அதாவது
மனதை அதன் துன்பங்களிலிருந்து விடுவிப்பது மந்திரம் ஆகும்.

மஹா மந்திரம் என்றால் என்ன?
ஒரு மந்திரம் ஒரு குறிப்பிட்ட துன்பத்தை மட்டும் நீக்க உதவலாம். ஆனால் மஹா மந்திரம் எனப்படுவது எல்லாவிதமான துன்பங்களிலிருந்தும் மனதை விடுவிக்கும் சக்திவாய்ந்ததாய் இருக்க வேண்டும்.

எல்லாசிதமான துன்பங்களும் எவை?
மனச்சஞ்சலங்கள், மனச்சோர்வு, மனஅழுத்தம், மனக்குழப்பம், பாவ விளைவுகள், தீய சிந்தனைகள், சண்டை சச்சரவுகள், காம, க்ரோத, மோஹ, லோப, மத, மாச்சர்யம் என்பவை ஆகும்.

இந்த அனைத்து விதமான மனதின் துன்பங்களில் இருந்தும் மனதை விடுவிக்கும் சக்தி வாய்ந்த மந்திரம் எது?
“ஹரே கிருஷ்ண” மந்திரம்.

இந்த “ஹரே கிருஷ்ண” மந்திரத்தை என்ன மந்திரம் என்று அழைப்பார்கள்?
மஹா மந்திரம்

இது மஹா மந்திரம் என்று எதில் குறிப்பிடப்பட்டுள்ளது?
வேத சாஸ்திரங்களில்

ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தைச் சொல்லக் கட்டுபாடுகள் எதுவும் இருக்கிறதா?
இல்லை.

நம் காதுகளுக்கு கேட்கும் வகையில் தினமும் குறைந்த பட்சம் 108 முறை ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சரித்து வந்தால் என்ன நடக்கும்?
மன அமைதியும் சந்தோஷமும் கிடைக்கும்.
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812