புதன், 10 ஏப்ரல், 2019

அறநெறி அறிவு நொடி

1.பால், தேன், பருப்பு, பாகு ஆகிய நாலையும் கொடுத்து சங்கத் தமிழ் மூன்றும் தா என்று கணபதியை வேண்டியவர் யார்?ஔவையார்

2. சீதக் களபச் செந்தாமரைப்பூம் என்று துவங்கும் பிள்ளையார் பாடலுக்கு என்ன பெயர்?
விநாயகர் அகவல்
3. ”முன்னவனே யானை முகத்தவனே,முக்தி நலம் சொன்னவனே”—- என்று விநாயகரைத் தொழுதவர் யார்?
அருட் பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள்

4. பிள்ளையாருக்கு ஒற்றைக் கொம்பு (தந்தம்) ஒடிந்திருப்பது ஏன்?
வியாசர் சொன்ன மகாபாரதத்தை எழுத ஒரு கொம்பை ஒடித்ததாக ஐதீகம்
5. ”கைத்தலம் நிறை கனி அப்பமோடு அவல்பொறி”—- என்று துவங்கி கரிமுகனைத் துதித்தவர் யார்?
அருணகிரிநாதர்
6. பொல்லாப் பிள்ளையாருடன் தொடர்புடைய சைவ அடியார் யார்?
திருநரையூரில் உள்ள பொல்லாப் பிள்ளையாரின் அருள்பெற்றவர் நம்பி ஆண்டார் நம்பி

7. ”வாதாபி கணபதிம் பஜே” என்ற கிருதியை இயற்றியவர் யார்?
முத்து சுவாமி தீட்சிதர்


8. “எனக்கு வேண்டும் வரங்களை இசைப்பேன் கேளாய் கணபதி” என்று உரிமையோடு பாடியவர் யார்?
பாரதியார்
9. ”முதாகராத்த மோதகம் சதா விமுக்தி சாதகம்”….என்ற சம்ஸ்கிருத ஸ்தோத்திரத்தின் பெயர் என்ன?
கணேச பஞ்ச ரத்னம்
10. ”கணாணாம் த்வா கணபதிம் ஹவாமஹே கவீம் கவீனாம்”…… என்று கணபதியைப் போற்றும் துதி எதில் இருக்கிறது?
ரிக் வேதம்
11. “வெள்ளாடை தரித்த விட்டுணு வென்று செப்பிய மந்திரத் தேவனை” என்று பாரதி மொழிபெயர்த்த மந்திரம் எது?
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம்…………. என்ற மந்திரம்
12. விநாயகரின் 16 முக்கியப் பெயர்களென்ன?
சுமுகன், ஏகதந்தன், கபிலன், கஜகர்ணன், லம்போதரன், விகடன், விக்னராஜன், விநாயகன், தூமகேது, கணாத்யக்ஷன், பாலச்சந்திரன், கஜானனன், வக்ரதுண்டன், சூர்ப்பகர்ணன், ஏரம்பன், ஸ்கந்தபூர்வஜன்

13. சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான் பெருமாள் நாயனார் ஆகியோருக்கு முன் ஔவையார் கைலாசம் சென்றது எப்படி?
பிள்ளையார் தன் துதிக்கையால் ஔவையாரை கைலாசத்துக்கு தூக்கிவைத்தார்.

14. மகாராஷ்டிரத்தில் அஷ்ட விநாயக கோவில்கள் மிகவும் பிரபலமானவை. அவை யாவை?
இவைகள் புனே நகரைச் சுற்றியுள்ளன: மோர்கான் மயூரேஸ்வர் கோவில், சித்தடெக் சித்தி விநாயகர் கோவில், பாலி வல்லாலேஸ்வர் கோவில், மஹத் வரத விநாயகர் கோவில், தேவுர் சிந்தாமணி விநாயகர் கோவில், லென்யாத்ரி கிரிஜாத்மஜ விநாயகர் கோவில், ஓஜார் விக்னேஸ்வரர் கோவில், ரஞ்சன்காம் மஹாகணபதி கோவில்

15. வாதாபி கணபதியை தமிழகத்துக்கு கொண்டுவந்த சைவப்பெரியார் யார்?
சிறுத்தொண்ட நாயனார்

16. ”.கடச் சக்கரச் செம்முகம் ஐந்துளான்”…….. என்ற பிள்ளையார் துதியுடன் துவங்கும் நூல் எது?
கந்தபுராணம்
17. “பிடி அதன் உரு உமை கொளமிகு கரியது வடிகொடு”…என்று பாடியவர் யார்?
திருஞானசம்பந்தர்

18. தெற்கில் பிள்ளையார் பிரம்மச்சாரி, வடக்கில் அவருக்கு இரண்டு மனைவியர் உண்டு. அவர்கள் பெயர்கள் என்ன?
சித்தி, புத்தி தேவியர்
19. பிள்ளையாருக்கு பிடித்த பூ எது? தின்பண்டம் எது?
எருக்கம் பூவும், கொழுக்கட்டையும் (மோதகம்)
20. நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்றும் சித்தர் யார்?
திருமூலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812