வியாழன், 18 ஜூலை, 2019

விரதம்



ஆன்மிகத்தில் விரதம் தொன்று தொட்டு கடைபிடிக்கப்படுகிறது. நினைத்த காரியம் வெற்றிகரமாக நடக்க நவசக்தி விரதத்தை கடைபிடிக்கலாம்.

ஆன்மிகத்தில் விரதம் தொன்று தொட்டு கடைபிடிக்கப்படுகிறது. ஏதாவது வேண்டுதல்கள் இருந்தால், விரதம் இருந்து இஷ்ட தெய்வத்தை வழிபட்டால், நினைத்த காரியம் கைகூடும் என்பது அனுபவம் உள்ளோர்களின் கருத்து.

சிலர் நாள் முழுவதும் உண்ணாமல் விரதம் இருப்பார்கள். சிலர் ஒரு வேளை மட்டும் உண்பார்கள். இதே போல், நீர் ஆகாரம் மட்டும் எடுத்துக் கொண்டு விரதம் இருந்து ஜெபிப்பவர்களும் உள்ளார்கள். இவையனைத்தும் அவரவர்களின் உடல்நிலைக்கு ஏற்றவாரு மாறுபடும். ஒருவர் நாள் முழுவதும் உண்ணாமல் இருந்து விரதம் இருந்தால், மற்றவர்களும் அப்படி இருக்கவேணடும எனறு எண்ணுவது தவறு. இறைநிலை மட்டும் மனதில் கொண்டாலே போதும்.

அந்த வகையில, இந்துக்கள் நவகிரக விரதம், நவராத்திரி விரதம், வரலெட்சுமி விரதம், விநாயகர் சதுர்த்தி விரதம், கந்தசஷ்டி விரதம் போன்றவை கடைபிடிக்கப்படுகிறது. இவைகளில் எந்த விரதத்தை கடைபிடித்தாலும், நம் எண்ணத்தில் உறுதியாக இருந்து நவக்கிரகங்கள் மற்றும் இறைநிலை பரப்பிரம்மத்தை மனதில் கொண்டு இருக்க வேண்டும். அப்படி இருந்தாலே, நாம் நினைத்த காரியம் கைகூடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812