திங்கள், 9 மே, 2011

அறநெறி அறிவுநொடி

கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர், ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்

(மேற்பிரிவு)


8499) சைவ சமயத்தின் பொதுப்பிராமண நூல் எது?

வேதம்

8500) சிறப்புப் பிராமண நூல் எது?

சிவாகமம்

8501) சிவாகம நூல்கள் கூறும் சாரமான உண் மையைப் பிழிந்தெடுத்துக் கூறும் நூல்கள் எவை?

சித்தாந்த சாத்திரங்கள்.

8502) சித்தாந்த சாத்திரங்களை வேறு எவ்வாறு அழைப்பர்?

மெய் கண்ட சாத்திரங்கள்

8503) சிவ தத்துவம் எத்தனை?

ஐந்து

8504) ஐந்து சிவ தத்துவங்களையும் தருக?

நாதம், விந்து, சாதாக்கியம்,

ஈசுவரம், சுத்தவித்தை.

8505) வித்தியாதத்துவம் எத்தனை?

ஏழு

8506) ஏழு வித்தியாதத்துவங்களையும் தருக?

காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன், மாயை

8507) அந்தக் கரணம் எத்தனை?

நான்கு

8508) நான்கு அந்தக் கரணங்களையும் தருக.

மனம், புத்தி, சித்தம், அகங்காரம்

8509) தன்மாத்திரை (புலன்) எத்தனை?

ஐந்து

8510) தன் மாத்திரை ஐந்தையும் தருக.

சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்.

8511) பொறி (ஞானேந்திரியம்) எத்தனை?

ஐந்து

8512) ஐந்து பொறிகளையும் தருக.

மெய், வாய், கண், மூக்கு, செவி

8513) கார்மேந்திரியங்கள் எத்தனை?

ஐந்து

8514) ஐந்து கார்மேந்திரியங்களையும் தருக.

நா, கை, கால், குதம், குறி

8515) பூதங்கள் எத்தனை?

ஐந்து

8516) ஐந்து பூதங்களையும் தருக.

நிலம், நீர், தீ, வளி, வான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812