திங்கள், 16 மே, 2011

அறநெறி அறிவுநொடி

கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர், ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்

கும்பாபிஷேகம்

8517) மந்திரம் என்பதற்கு என்ன பொருள்?

சொல்பவனைக் காப்பது என்று பொருள்

8518) மந்திரங்களை ஒருங்கிணையைச் செய்து ஒன்றாக குவியச் செய்து இறைவனின் கருவறையில் அதன் சக்தியை நிலைபெறச் செய்வதற்கு என்ன பெயர்?

குடமுழக்கு

8519) வைணவத்தில் குடமுழக்கை என்னவென்று அழைப்பர்?

சம்ப்ரோட்சணம்

8520) கும்பாபிஷேக நிகழ்ச்சி ஆரம்பிக்கப்படுவதிலிருந்து பூர்த்தியாகும் வரையில் எந்தவிதமான இடர்களும் வராமல் இருக்க செய்யப்படுவது என்ன பூஜை?

விக்னேஸ்வர பூஜை

8521) இடம் சுத்தமடைய வருணபகவானை வேண்டுவதை என்னவென்பர்?

புண்யாக வாசனம்

8522) புண்யாகம் என்றால் என்ன?

புனிதம்

8523) வாசனம் என்றால் என்ன?

மங்களகரமான வாக்கியங்கள்

8524) பசுவிடமிருந்து கிடைக்கும் ஐவகைப் பொருட்களையும் தருக?

சாணம், கோமியம், பால், தயிர், நெய்.

8525) பசுவிடமிருந்து கிடைக்கும் ஐவகைப் பொருட்களையும் தனித்தனியாக பூஜித்து மந்திரார்த்தமாக ஒன்றாய்க் கலந்து பஞ்சகவீயமாக்கி யக்ஞத்தில் கலந்துவிடும் பூஜையை என்ன பூஜை என்று கூறுவர்?

பஞ்சகவ்ய பூஜை

8526) பூதகணங்களால் இடையூறுகள், தாக்குதல்கள் ஏற்படாதவாறு கணங்களின் தலைவனாகிய மகா கணபதியை நினைத்து அவருக்குப் பிரியமான பொருளை அக்னியில் சமர்ப்பிக்கும் வேள்வியை என்னவென்பர்?

கணபதி ஹோமம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812