கே. ஈஸ்வரலிங்கம்,
தலைவர், ஸ்தாபகர்
தமிழர் நற்பணி மன்றம்
(கும்பாபிஷேகம் - வாஸ்து சாந்தி)
8536) வாஸ்து என்ற சொல்லுக்கு என்ன பொருள்?
வசிக்கும் இடம், பூமி, நிலம்
8537) அந்தகன் என்கிற அரசுடன் சம்காரம் செய்யப்பட்ட காலத்தில் சிவபெருமானின் நெற்றியிலிருந்து விழுந்தது என்ன?
வியர்வைத் துளி
8538) இந்த வியர்வைத் துளி பூமியில் என்னவாக மாறியது?
ஓர் அசுரனாக
8539) இந்த அசுரன் என்ன செய்ய முற்பட்டான்?
பூமியை விழுங்க முற்பட்டான்
8540) அந்த அசுரனை கீழே விழ வைக்க சிவபெருமான் என்ன செய்தார்?
வீரபத்திரரை அனுப்பி வைத்தார்
8541) அவனை தள்ளச் செய்து அவன்மீது பிரம்மன் முதலான ஐம்பத்து மூன்று தேவதைகளை வசிக்கும்படி பணித்தவர் யார்?
சிவபெருமான்
8542) அசுரனின் கோரப் பசி தீர்வதற்காக சிவபெருமான் என்ன கொடுத்தார்?
உலக வடிவமான பூசணிக்காயை உணவாகக் கொடுத்தார்
8543) அந்த அரக்கன் யார்?
வாஸ்து புருஷன்
8544) கும்பாபிஷேகத்தின்போது வாஸ்துவுக்கு செய்யப்படும் பூஜையை என்னவென்பார்கள்?
வாஸ்து சாந்தி
8545)வாஸ்து சாந்தியின் போது என்ன செய்வார்கள்?
வாஸ்து புருஷனை எழுப்பி பூஜை செய்து அவருக்கு விருப்பமான பூசணிக்காயை பலியிடுவார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக