திங்கள், 23 மே, 2011

அறநெறி அறிவுநொடி

கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர், ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்

கும்பாபிஷேகம்


8527) கிரகங்கள் நன்மையே செய்ய வேண்டி ஒன்பது கிரகங்களுக்குமுரிய ரத்தினம், வஸ்திரம் தான்யம் ஆகியவற்றை அதற்குரிய திசைகளில் வைத்து மூல மந்திரங்களைச் சொல்லி ஹோமம் செய்தலை என்னவென்று கூறுவர்?

நவக்கிரஹ ஹோமம்

8528) கும்பாபிஷேகம் நடைபெறுவதால் பக்தர்களின் நலன்கள் காக்கப்பட வேண்டும். அதற்கு இறைவனுடைய திருவருள் துணை புரியட்டும் என்று நல்வாக்கியம் சொல்வதை என்ன வென்பர்?

மகாசல்பம்

8529) கும்பாபிஷேக நிகழ்ச்சிக்காக செலவிடப்படுகின்ற பணத்தினை சுத்தமான இடத்தில் வைத்து மகாலட்சுமியை நினைத்து செயப்படும் பூஜை என்ன?

தனபூஜை

8530) தனபூஜை பார்ப்பதால் ஏற்படும் நன்மை என்ன?

வீட்டில் தனம் சேரும்

8531) பிராணிகளில் சகல தெய்வங்களும் உறைவதாக கொள்ளப்படுகின்ற பிராணி எது?

கோமாதா

8532) கும்பாபிஷேக கிரியையின் போது பசுவை அலங்கரித்து செய்யப்படுகின்ற பூசை என்னவென்பர்?

கோபூஜை

8533) கோபூஜை செய்வதால் கிடைக்கும் பலன் என்ன?

தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள், சித்தர்களின் ஆசி கிடைக்கும்.

8534) புனரமைக்கப்பட்ட கோயிலின் கதவை எப்போது, திறக்க வேண்டும்?

நல்ல முகூர்த்தவேளையில் திறக்க வேண்டும்.

8535) எந்த பூஜைகளை செய்து திறக்க வேண்டும்?

கணபதி பூஜை, நவக்கிரக பூஜை செய்த பிறகு மங்கல வாத்தியம் வேத கோஷங்கள் முழங்கிட பக்தர்கள் இறைவன் திருநாமத்தை சொல்லிக் கொண்டு இருக்க திறக்கப்பட வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812