திங்கள், 10 அக்டோபர், 2011

ஸ்ரீ ஞான பைரவர் ஆலயத்தில் சனீஸ்வர கிரகதோஷ நிவர்த்தி



கொழும்பு கிராண்ட்பாஸ், டவாஸ் லேன் அருள்மிகு ஸ்ரீ ஞான பைரவ சுவாமி தேவஸ்தானத்தில் புரட்டாதி மாத கடைசிச் சனிக்கிழமையாகிய எதிர்வரும் 2011.10.15ஆம் திகதி மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை சனீஸ்வர கிரகதோஷ நிவர்த்திக்காக விசேட மஹாயாகம் நடாத்தப்படவுள்ளது.

சாகித்திய வியாகரணாச்சார்ய பிரம்மஸ்ரீ ச. சிரா பாலகிருஷ்ண ஐயரின் நல்லாசியுடன் ஸ்ரீ ஐயப்ப சேவாபீட பீடாதிபதி தேசபந்து சிவஸ்ரீ பால ரவிசங்கர சிவாச்சாரியார் தலைமையில் இந்த யாகம் நடத்தப்படும். சனி திசை, சனி புத்தி, சனி பார்வை உள்ளோர் அனைவரும் தங்கள் பெயராலும் குடும்பத்தவர் வியாபார, ஸ்தாபன பெயராலும் சங்கற் பஞ் செய்து பவித்திரம்) தர்ப்பை அணிந்து இந்த முழுமையான யாகத்தில் கலந்து கொண்டு சனீஸ்வர தோஷ நிவர்த்தி பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812